மொழியும் பிரபஞ்சமும் – 1

சரித்திரத்தின் புலர்காலையில் எழுந்த பறவைக் குரல் ரிக்வேதம்.  அது இசையானபோது சாமம் ஆயிற்று.  சாம வேதத்தின் துணை நூலான பிரகதாரண்யக உபநிடதம் சொல்லுக்கும் பொருளுக்கும் இடையேயான உறவு பற்றிப் பேசும் இடம் மொழியைப் பற்றிய புராதன இந்தியச் சிந்தனையை அறிந்துகொள்வதற்குரிய சிறந்த தொடக்கப்புள்ளியாகும். பிரகதாரண்யக உபநிடதம் முதலில் சூனியத்தைப் பற்றிப் பேசுகிறது.  அந்த சூனியத்தின் பிரதிநிதியான மரணத்தைப் பற்றி விளக்குகிறது.  நிலம், நீர், வாயு, அக்னி, வானம் எனும் ஐம்பெரும் பருக்கள் உருவானதை சித்தரிக்கிறது.  அவற்றிலிருந்து பிரஜாபதி… Read More மொழியும் பிரபஞ்சமும் – 1

பொருந்தாத மகுடம்

பல்கலைக் கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது, ஒரு துறவிபோல வாழ வேண்டும் என்கிற ஆவலில் தத்துவப் பாடப்பிரிவில் சேர்ந்தேன்.  முறைப்படி துறவியாக மாறும் முன்னரே நான் காவி ஆடைகளை அணியத் தொடங்கியிருந்தேன்.  கல்லூரிக்கு வெளியே யாரேனும் என் பெயரைக் கேட்டால், அத்வைதானந்தா என்றோ சச்சிதானந்தா என்றோ அந்த நேரத்தில் சட்டென்று வாய்க்கு வருகிற ஏதோ ஒரு பெயரைச் சொல்லிவிடுவேன்.  விவேகானந்தரின் சரிதையைப் படித்தபோது அவரும் இதேபோல நடந்துகொண்டதைப் படித்திருந்ததால் நானும் அது போலவே இருக்க விரும்பினேன்.  ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஒரு… Read More பொருந்தாத மகுடம்

இந்திய இலக்கிய மரபில் தொல்படிமங்கள்

வரலாற்றின் தொடக்கம் முதல் கதை, கவிதை, இலக்கியங்கள் உள்ளன.  மத்திய தரைக்கடல் நாடுகளான சுமேரியா, பைசான்டியா போன்றவற்றிலும் மேலும் மேற்குப் பக்கமாக நகர்கையில் ஸ்லாவிக், ஜெர்மன் நாடுகளிலும் அதிபுராதன இலக்கியப் படைப்புகள் உண்டு.  ஆனால் இந்தியாவில் கிறிஸ்துவுக்கு முன்பு எழுதப்பட்ட சரியான இலக்கியப் படைப்புகள் எவையும் நமக்கு இதுவரை கிடைக்கப் பெறவில்லை.  காலத்தால் மிகப் புராதனமான ரிக், யஜுர் வேதங்களும் பிறவும் இலக்கியங்களல்ல.  புராதன வாழ்வின் அடிப்படைகளாக அமைந்த தோத்திரங்கள், வழிபாட்டு முறைகளைப் பற்றிய விதிகள், சடங்குகளைப்… Read More இந்திய இலக்கிய மரபில் தொல்படிமங்கள்

நடராஜ குருவும் நானும் – 12

குரு சோமனஹள்ளிக்கு வந்த மறுநாள், ஒற்றை அறை கொண்ட குடிசையை விரிவுபடுத்த ஒரு சமையலறையை வடிவமைத்தார்.  அதை அரை வட்ட வடிவில் அமைப்பது அவருடைய திட்டம்.  குடிசையிலிருந்து புதிய சமையலறைக்குச் செல்ல கதவு ஏதும் கிடையாது.  சுவரில் இருந்த ஒரு திறப்புதான் வழி.  வடிவத்தை முடிவு செய்த பின்னர், ஒரு வாளியை எடுத்துக்கொண்டு ஆற்றை நோக்கி நடந்தார் குரு.  என்னையும் ஒரு வாளியை எடுத்துக்கொண்டு வரச்சொன்னார்.  வாளியில் கற்களை சேகரித்துக்கொண்டு கட்டட வேலை நடக்குமிடத்திற்கு வந்தோம்.  எங்களைப்… Read More நடராஜ குருவும் நானும் – 12

விடுதலையின் மெய்யியல்

‘அடுத்து என்ன?’ என்ற கேள்வியின் விளைவாகவே எதனுடைய தொடக்கமும் நிகழ்கிறது.  ‘அடுத்து நான் செய்ய வேண்டியது என்ன?’ என்ற நம்முடைய கேள்விக்கு நாம் பதில் சொல்ல வேண்டிய் சந்தர்ப்பம் எந்த நேரத்திலும் வாய்க்கலாம்.  இந்தக் கேள்வி பலரை குழப்பமடையச் செய்கிறது.  இந்தக் கேள்வியை முகங்கொள்ளும்போது, தீர்க்கப்படவேண்டிய எண்ணற்ற பிரச்சினைகளையும், சந்திக்க வேண்டிய நெருக்கடிகளையும், எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைகளையும் சிலர் அனுபவிக்கிறார்கள்.  மிகுந்த மனக்குழப்பத்துக்கு ஆளாகிறார்கள்; ஆயிரக்கணக்கானவற்றிலிருந்து ஒரு உறுதியற்ற உணர்வால் அவர்களுடைய இயலாமையின் முடிவற்ற படுபாதாளத்தில் அவர்கள்… Read More விடுதலையின் மெய்யியல்

மரணத்தை எதிர்கொள்ளல் – 5

மரணத்தைப் பற்றிய மிகச் சிறந்த புத்தகம் ‘கதா உபநிஷத்’.  அந்த அற்புதக் கதையில் ஒரு சிறுவன் மரணத்துக்கு எதிராக நிறுத்தப்படுகிறான்.  ஒரு புறம், இடைவிடாத ஆக்கம், வாழ்க்கையின் இயக்கம் ஆகியவற்றின் பிரதிநிதியான அச்சிறுவன் எல்லா சாத்தியக்கூறுகளையும் கண்ணுறுகிறான்.  திடீரென்று இந்தப் புலன் சார்ந்த விளையாட்டு சுவாரஸ்யமற்று இருப்பதாக அவன் கருதுகிறான்.  இதற்கு மாறாக அவன் புலன்களைக் கடந்த நிலையைப் பற்றி சிந்திக்கிறான்.  எனவே, வாழ்வும் மரணமும் ஒரு பக்கம், கடந்த நிலைக்கான சாத்தியம் இன்னொரு பக்கம்.  கடந்த… Read More மரணத்தை எதிர்கொள்ளல் – 5

மரணத்தை எதிர்கொள்ளல் – 4

என்னுடைய மரணத்தின்போது நான் வலியுறுத்திச் சொல்லும் முதல் விஷயம், எந்தவித மந்திர உச்சாடனமோ அல்லது வேறு வகையான சூழலுக்குக் கேடு விளைவிக்கும் கூச்சலோ இருக்கக்கூடாது என்பதுதான்.  மக்கள் அவரவர் வேலையைப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும்.  சடலத்தை அப்படியே கிடக்கவிட்டால் கொஞ்ச நேரத்தில் நாற்றமடிக்க ஆரம்பித்துவிடும்.  எனவே, அதை உரிய வகையில் அப்புறப்படுத்த வேண்டும்.  இதில் பலமுறைகளைப் பற்றி நான் யோசித்து வருகிறேன்.  அதை எரித்துவிடுவது ஒருவகை.  ஆனால், ‘நான் இறந்துவிடும்போது நான் முழுமையாக இறந்திருக்கிறேனா?’ என்ற கேள்வி என்… Read More மரணத்தை எதிர்கொள்ளல் – 4

மரணத்தை எதிர்கொள்ளல் – 3

மரணம் என்ற பொருள், விவாதத்திலிருந்து விலக்கப்பட்ட ஒன்றாகவே இருந்து வருகிறது.  குறிப்பாக சில பெண்களுக்கு முன்னால் நீங்கள் மரணத்தைப் பற்றி பேசினால் அவர்கள் உங்கள் வாய்மேல் கையை வைத்து, ‘மரணத்தைப் பற்றி பேசாதீர்கள், வேறு ஏதாவது நல்ல விஷயத்தைப் பற்றி பேசுங்கள்’ என்று சொல்கிறார்கள்.  இதே நபர்களே அடிக்கடி ஒருவனின் மரணத்துக்கு மிகச் சிறந்த காரணகர்த்தாக்களாகவும் இருக்கிறார்கள்.   அண்மையில், இறந்துகொண்டிருந்த ஒருவரின் பக்கத்தில் இருந்தேன்.  அவருடைய மாமியார் பக்கத்தில் உட்கார்ந்து கடவுள், சொர்க்கம், மற்றும் மரணத்துக்குப்பின் ஆன்மாவுக்கு… Read More மரணத்தை எதிர்கொள்ளல் – 3

மரணத்தை எதிர்கொள்ளல் – 2

நம்முடைய எந்தப் பகுதி உண்மையில் ‘நாம்’?  அது நாம் உண்ணும் உணவா, நம்முடைய எலும்புகளின் மஜ்ஜையாக மாறும் உணவு ஊட்டமா, நம் மூளையின் செல்களா, அல்லது நம்முடைய மத்திய நரம்பு மண்டலமா, அல்லது நம்முடைய தசைகளா?  நாம் யாராக இருக்கிறோம் என்பதைப் பெரிதாகக் குறைக்காமல் நம்முடைய சில பகுதிகளை நீக்கிவிட முடியும்; வேறு சில பகுதிகளை நீக்கினால் நாம் இறந்துவிடுவோம்.  இரண்டாவதாகச் சொன்னதை ‘நாம் யாராக இருக்கிறோம்’ என்பதைத் தீர்மானிக்கும் முக்கிய அம்சங்களோடு இணைத்துப் பார்க்க வேண்டும்.… Read More மரணத்தை எதிர்கொள்ளல் – 2

மரணத்தை எதிர்கொள்ளல் – 1

‘மரணம்’ – இந்த வார்த்தையைவிட அதிகம் அச்சம் தருகிற, ஓயாமல் நினைவில் ஊடாடிவருகிற, வஞ்சகமான பயங்கரம் நிரம்பிய வேறு வார்த்தை கிடையாது.  அது இறுதியும், முழுமையும் கொண்டது.  இருந்தும் பலருக்கு மரணம் ஓர் ஆறுதல்; அவர்களின் எல்லாத் தொல்லைகளையும் முடிவுக்குக் கொண்டுவருகிற ஒரு வாக்குறுதி. மரணத்தைக் கண்டு பயப்படுகிறவனுக்கும், அதை விரும்பி நாடுகிறவனுக்கும் மரணம் நேர்கிறது.  மரணத்தைவிட நிச்சயமான விஷயம் இந்த உலகத்தில் வேறெதுவும் இல்லாவிட்டாலும் நிறையப் பேர் அதைப் பற்றி சிந்திக்க விரும்புவதில்லை.  எனவே, அது… Read More மரணத்தை எதிர்கொள்ளல் – 1