ஶ்ரீசக்ர தியானம் – 26

க*ம் ஸர்வவித்ராவிணீ தாயே, அனைத்து திசைகளிலும் கிளைபரப்பி, மணம் நிரம்பிய மலர்கள் செறிந்து நின்றிருந்த விந்தையான மரம் என்ன ஆனது? வாடி, பெருமழையில் வீழ்ந்து மண்ணாகி மறைந்தது அந்த மரமா? அதன் இலைகளும் மலர்களும் என்னவாயின? ஆவியாகி வளிமண்டலத்தில் மறைந்துவிட்டனவா? காலநெருப்பு அம்மரத்தை வெறும் புகையாகவும் சாம்பலாகவும் ஆக்கிவிட்டதா? அதன் இலைகளில் இருந்த பசுமையாற்றல் மேகங்களில் மறைந்து, எப்போதாவது தோன்றும் மின்னலாகிவிட்டதா? படைப்புத் தொடக்கத்தில், பஞ்சபூதங்களின் மூல உயிரணுக்கள் ஐம்மடங்காக்கப்பட்டன. இப்போது அந்திமாலை வேளையில் அவை தம்… Read More ஶ்ரீசக்ர தியானம் – 26

சௌந்தர்யலஹரீ – 26

விரிஞ்சி: பஞ்சத்வம் வ்ரஜதி ஹரிராப்னோதி விரதிம் விநாஶம் கீநாஶோ ப்*ஜதி த*னதோ யாதி நித*னம் விதந்த்ரீ மாஹேந்த்ரீ விததிரபி ஸம்மீலித த்ருஶா மஹாஸம்ஹாரே ‘ஸ்மின் விஹரதி ஸதி த்வத்பதிரஸௌ பாடல் – 26 பிரம்மன் மீண்டும் பஞ்சபூதங்கள் என்றாகிறான் விஷ்ணு தன் ஆர்வத்தை ஒழிகிறான் முற்றிலும் அழிப்பவன் மரணத்தை தியானிக்கிறான் செல்வத்தின் இறை மறைகிறான் இந்திரனோ மனுக்களுடன் சேர்ந்து அரைக்கண் மூடிக் கிடக்கிறான் அரனை அகலாதவளே அறுதி அழிவெனும் அந்நேரத்தில் உன் இறைவன் மட்டும் தன் ஆடலில்… Read More சௌந்தர்யலஹரீ – 26

ஶ்ரீசக்ர தியானம் – 25

கம் ஸர்வஸம்க்ஷோபி*ணீ தாயே, நிலைபேறான மெய்மை எனும் வைரக்கற்களால் அலங்கரிக்கப்பட்ட சிவானந்தமெனும் அரியணையில் நீ வீற்றிருக்கிறாய். நீ ஒரு ஆளாக அல்ல, பல்லாயிரம் ஒளிர்வுகளாக காணப்படுகிறாய். சிவனின் பேரொளி எண்ணற்ற கோடி அருமணிகளால் ஆனது. அவை ஒவ்வொன்றிலுமிருந்தும் அளவிடமுடியா பிரகாசத்துடன் எண்ணற்ற கதிர்கள் எழுந்து எல்லா திசைகளிலும் ஒளிவீசுகின்றன. வண்ணமிகு அக்கதிர்களின் திரளால் உன் தூய வடிவு போர்த்தப்பட்டிருப்பதால் அதை காணமுடிவதில்லை. பிரபஞ்சத்தின் அழிவிலும், மீளெழுகையிலும், எல்லா மன்வந்தரங்களிலும் நீ படைப்பவளாகவும் கரைத்தழிப்பவளாகவும் வீற்றிருக்கிறாய். நுட்பங்கள் நிறைந்த… Read More ஶ்ரீசக்ர தியானம் – 25

சௌந்தர்யலஹரீ – 25

த்ரயாணாம் தேவானாம் த்ரிகுணஜனிதானாம் தவ ஶிவே ப*வேத் பூஜா பூஜா தவ சரணயோர்யா விரசிதா ததா* ஹி த்வத்பாதோத்வஹனமணிபீட*ஸ்ய நிகடே ஸ்தி*தா ஹ்யேதே ஶஶ்வன்முகுலிதகரோத்தம்ஸமகுடா: பாடல் – 25 அரன் துணைவியே உனது முக்குணங்களை உண்டாக்கும் கடவுளர் மூவரும் உன் இணையடி அமைந்த  அருமணி பதித்த கால்மணையருகே அகலாது நின்றபடி தம் தலைமேல்  மலர்மொக்கெனக் குவித்த கரங்களோடு உன் திருவடி தொழுவதே தொழுகை ** 25 முதல் 27 வரையிலான மூன்று பாடல்களையும் ஒரு அலகாகக் கொள்ள… Read More சௌந்தர்யலஹரீ – 25

ஶ்ரீசக்ர தியானம் – 24

யம் ரம் லம் வம் அனங்கவேகினீ ஶிவதூதீ மஹாவித்யேஶ்வரீ மீஞானத்தின் இறைவியே, அன்னையே, நீ யாரென்று எவராவது கேட்டால், எம்மை மகிழ்விப்பவள் என்றுதான் சொல்ல வேண்டும். அதற்கும் மேல், இறையோடு ஒன்றுகலக்க எம்மை தகுதிப்படுத்துபவள் என்று கூறலாம். எமது விழிப்புநிலையில், இனிய ஊக்கமளிக்கும் சொற்கள் கொண்டு எமதுள்ளத்தை மகிழ்விக்கிறாய். நீ படைக்கும் உலகின் இயல்அழகைக் கொண்டு சுவையூட்டுகிறாய். எனவே நீ ரம்யா. எம்மை மகிழ்விப்பவள். நாங்கள் உறங்குகையில் பெயர்களும் உருக்களும் கொண்ட உலகை மறைத்துக் கொள்கிறாய். அங்கே… Read More ஶ்ரீசக்ர தியானம் – 24

சௌந்தர்யலஹரீ – 24

ஜகத் ஸூதே தா*தா ஹரிரவதி ருத்ர: க்ஷபயதே திரஸ்குர்வன்னேதத் ஸ்வமபி  வபுரீஶஸ்திரயதி ஸதாபூர்வ: ஸர்வம் ததிதமனுக்ருஹ்ணாதி ச ஶிவ ஸ்தவாஞாமாலம்ப்ய க்ஷணசலிதயோர்ப்*ரூலதிகயோ: பாடல் – 24 தாயே, பிரம்மன் உலகை படைக்கிறான் விஷ்ணு காக்கிறான் ருத்ரன் அழிக்கிறான் அனைத்தையும் தன் உடலில் ஈர்த்து தன்னையே மறைத்துக்கொள்கிறான் நிலைபேற்றைக் குறிக்கும் சதா என்பதை தன் பெயரின் முன்னொட்டாகக் கொண்ட சிவன் மெல்லிய கொடிபோன்ற உன் புருவத்தின் நுண்ணசைவில் உன் கட்டளை அறிந்து முழு உலகுக்கும் அருள்புரிகிறான் ** தொடுவானில்… Read More சௌந்தர்யலஹரீ – 24

ஶ்ரீசக்ர தியானம் – 23

சம் ச*ம் ஜம் ஜ*ம் ஞம் அனங்கமேக*லா வஹ்னிவாஸினீ பே*ருண்டீ அன்னையே, உன் இறையின் எரிஆடலில் மகிழ்பவளே, அவன் தன் மேனியில் பூசிக்கொள்ளும் திருநீறு உன் படைப்பு ரகசியத்தின் மூன்று கட்டங்களைக் குறிக்கும் முக்குணங்களின் குறியீடாகத் திகழ்கிறது. சத்வ குணம் கொண்டு அனைத்து வடிவங்களுக்கும் போற்றத்தக்க உருவரை (adorable design) ஒன்றை அளிக்கிறாய். அதோடு, வண்ணம், சுவை, வடிவ அமைப்பியல்சார்ந்த நுணுக்கம் என்பனவற்றையும் கொடுப்பதால், அவற்றிற்கு இருத்தலியல் உறுதிப்பாடு (existential validity) கிடைக்கிறது. ரஜோ குணம் கொண்டு… Read More ஶ்ரீசக்ர தியானம் – 23

சௌந்தர்யலஹரீ – 23

த்வயா ஹ்ருத்வா வாமம் வபுரபரித்ருப்தேன மனஸா ஶரீரார்த*ம் ஶம்போ*ரபரமபி ஶங்கே ஹ்ருதமபூ*த் யதேதத் தவத்ரூபம் ஸகலமருணாப*ம் த்ரிநயனம் குசாப்*யாமானம்ரம் குடிலஶஶிசூடாலமகுடம் பாடல் – 23 அன்னையே சிவனின் இடபாகத்தை கைக்கொண்டும் நிறைவடையாமல் அவனது இன்னொரு பாகத்தையும் எடுத்துக்கொண்டுவிட்டாய் போலும் அதனால்தான் முக்கண்களும், முலைகளின் கனத்தால் சற்றே முன்சரிந்த உடலும், பிறைநிலவு சூடிய குழலும் கொண்ட உனதுருவம் ஒண்சிவப்பாய் ஒளிர்கிறது போலும் ** முழுமுதலும் முக்குணங்களும் இசைவோடு இணைதலே யோகம் எனப்படுவது. ப்ராணாயாமத்தில், ப்ராணனும் அபானனும் ஒன்றாகி வியானன்,… Read More சௌந்தர்யலஹரீ – 23

ஶ்ரீசக்ர தியானம் – 22

பம் ப*ம் பம் ப*ம் மம் அனங்கரேகா* நித்யக்லின்னா ப*கமாலினீ பெருங்கருணை வடிவானவளே, சூரியனிலிருந்து ஒளிக்கற்றைகள் எல்லா திசைகளிலும் ஒளிர்கின்றன. ஆனால் சூரிய ஒளி ஒரு பொருளை ஒளிரச் செய்து அதை புலப்படச் செய்யும்வரை எவரும் அந்த ஒளிக்கற்றைகளை பார்ப்பதில்லை. ஒளிக்கதிர்கள் ஒளிரச் செய்யும் பொருள்களிலிருந்து, ஒளிரும் பகலவன் உய்த்தறியப்படுகிறான். அதே போல், எல்லா திசைகளிலிருந்தும் உன் அன்பின் கதிர்கள் ஒளிர்கின்றன. எம் மனதுக்குகந்தவற்றை அழகுறச் செய்வதும் அவையே. எழிலானவற்றின் பின்னால் உன்னை நீ மறைத்துக்கொள்கிறாய். சிலபோதுகளில்… Read More ஶ்ரீசக்ர தியானம் – 22

சௌந்தர்யலஹரீ – 22

ப*வானி த்வம் தாஸே மயி விதர த்ருஷ்டிம் ஸகருணாம் இதி ஸ்தோதும் வாஞ்சன் கத*யதி ப*வானி த்வமிதி ய: ததைவ த்வம் தஸ்மை திஶஸி நிஜஸாயுஜ்யபதவீம் முகுந்தப்ரஹ்மேந்த்ரஸ்பு*டமகுடநீராஜிதபதாம் பாடல் – 22 பவானீ,  இந்த அடிமைக்கு அருட்பார்வை ஒன்றை அருள்வாயாக! அரி அரன் அயன் மூவரும்  தீபம் கொண்டு உன்னை ஆராதித்து உனக்கு தலைவணங்கும்போது  அவர்களது மகுடத்தின் ஒளி உன் பாதங்களை ஒளிரச் செய்கிறது.  உன்னை போற்ற விழைவோர்  ‘தேவி, நீ’ என்று சொல்லத் தொடங்கிய உடன்… Read More சௌந்தர்யலஹரீ – 22