ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 36

அறிவினு சக்திஅனந்தமுண்டு இதெல்லாம் அறுதியிடாம் சம அன்ய என்னிவண்ணம் இருபிரிவாய் இதில் அன்யஸாம்யமார்ன்னு உள்ளுருவில் அமர்ன்னு தெளிஞ்ஞு உணர்ன்னிடேணம்            (ஆத்மோபதேச சதகம் – பாடல் 36) அறிவின் ஆற்றல்கள் எண்ணற்றவை  ஒன்றென்றும் பிறிதென்றும் பகுக்கலாம் அவற்றை இவ்விரு பிரிவில் பிறிதென்பதை ஒன்றுடன் கலந்தே அகத்தே பெறுதல் வேண்டும் தெளிவே * மனம் விழிப்பு நிலையில் இருக்கையில் ஏற்படும் ஏதோ சில பதிவுகளே அறிவு என நாம் எண்ணுகிறோம். ஆனால் அது ஒரு கூறு மட்டுமே. தன்னொளி கொண்டு… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 36

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 35

ஒரு பதினாயிரம் ஆதிதேயர் ஒன்னாய் வருவது போலே வரும் விவேகவிருத்தி அறிவினெ மூடும் அநித்ய மாயயாம் ஈ இருளினெ ஈர்ன்னெழும் ஆதிசூர்யன் அத்ரே (ஆத்மோபதேச சதகம் – பாடல் 35) பதினாயிரம் கதிரவர் ஒன்றாய் எழுவது போல் தோன்றும் பகுத்தறிவே அறிவை மறைக்கும் நிலையில்லா மாயையாம் இந்த இருளினைக் கிழித்தெழும் முதற்கதிரவனே * நம் ஆர்வத்தைத் தூண்டும் பொருட்களால் நிறைந்தது புற உலகு. நமது ஐம்புலன்களும் அப்பொருட்களின் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டபடியே உள்ளன. ஆனால், எந்தக் கவர்ச்சியும் நிலைத்திருப்பதில்லை.… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 35

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 34

அரநொடியாதியராளியார்ன்னிடும் தே ருருளதிலேரியுருண்டிடுன்னு லோகம்; அறிவிலநாதியதாய் நடன்னிடும் தன் திருவிளயாடலிதென்னறிஞ்ஞிடேணம்                                                         (ஆத்மோபதேச சதகம் – பாடல் 34) அரைநொடி முதலாய ஆரக்கால்கள்கொண்ட தேருருளைகளின் மேலமர்ந்து உருளும் உலகு அறிவிலெப்போதும் நிகழும் முதலென்பதில்லா திருவிளையாடல் இது * நாம் உணரும் உலகு பற்றி எண்ணிப்பார்க்கும்போது, நம்மைச் சுற்றிலும் பெருவெளி ஒன்றிருப்பது நமக்குத் தெரிகிறது. ஒரு வெளியின் மையத்திலேயே நாம் எப்போதும் இருக்கிறோம். அங்கிருந்து எத்திசையில் நோக்கினாலும் தொடுவானம் ஒரே தொலைவில்தான் இருக்கும். தொடுவானை நாம் ஒருபோதும் நெருங்க முடியாது;… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 34

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 33

அறிவு நிஜஸ்திதியிங்கறிஞ்ஞிடானாய் தர முதலாய விபூதியாயி தானே மறியுமவஸ்தயிலேறி மாறி வட்டம் திரியுமலாதசமம் திரிஞ்ஞிடுன்னு (ஆத்மோபதேச சதகம் – பாடல் 33) அறிவு தன்னியல்பறிவதற்கிங்கே நிலம் முதலாய கூறுகளாகி சுழன்றேறி மாறி வட்டமிட்டு எரியும் கொள்ளிபோல் சுழல்கிறது  * எல்லா காலங்களிலும் உலகெங்கிலும் மானுடர் படைப்பை விளக்க முயன்று வந்துள்ளனர். இந்த முயற்சியில் பல கதைகள் இட்டுக் கட்டப்பட்டன. செமிடிக் மதத்தினரைப் பொறுத்தவரை ஆதியில் ஒரு இருட்குழியில் வாழ்ந்த கடவுள் மட்டுமே இருந்தார். அவர் ஒரு உலகை… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 33

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 32

அறிவது தர்ம்மியெ அல்ல, தர்ம்மமாம், ஈ அருளிய தர்ம்மி அத்ருஶ்யமாகயாலே தர முதலாயவ ஒன்னுமில்ல, தாங்குன்னு ஒரு வடிவாம் அறிவுள்ளது ஓர்த்திடேணம்                                                               (ஆத்மோபதேச சதகம் – பாடல் 32) அறிவது தர்ம்மியை அல்ல தர்மங்களையே தர்ம்மியை கட்புலனறிவதில்லை  உலகு முதலாயவை ஒன்றும் இல்லை அறிவு தாங்கும் ஒரு வடிவமே என்றறிக! * இப்பாடலை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், ப்ருஹதாரண்யக உபநிடதத்தின் முதல் அத்தியாயத்தில் நான்காவது பகுதிக்கு சங்கரர் எழுதிய உரையை நீங்கள் படித்திருக்க வேண்டும்.  சங்கரரது அனைத்து… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 32

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 31

அனுபவமாதியிலொன்னிரிக்கிலல்லா தனுமிதியில்லிது முன்னமக்ஷியாலே அனுபவியாததுகொண்டு தர்ம்மியுண்டெ ன்னனுமிதியாலறிவீலறிஞ்ஞிடேணம் (ஆத்மோபதேச சதகம் – பாடல் 31) [அனுபவம் ஆதியில் ஒன்னிரிக்கிலல்லாதெ அனுமிதியில்ல இதுமுன்னமக்ஷியாலே அனுபவியாததுகொண்டு தர்ம்மியுண்டென்னு அனுமிதியால் அறிவில் அறிஞ்ஞிடேணம்] முன்னனுபவமின்றி அனுமானமில்லை முன்னம் இதை கண்டதில்லை என்பதனால் தர்ம்மி அனுமானத்தால் அறியப்படுவதில்லை என்பதறிந்திடல் வேண்டும் * இனி நாம் காண இருக்கும் மூன்று பாடல்கள் நமது மெய்த்தேட்டத்தில் நமக்கு உதவக்கூடிய வழிமுறையை அளிப்பவை. நாமிருக்கும் உலகு குறித்து மூன்று அடிப்படை கேள்விகள் நமக்கு எழக்கூடும்? ‘பொருள் என்பது… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 31

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 30

ஜடமறிவீலறிவின்னு சிந்தையில்லோ திடுகயுமில்லறிவென்னறிஞ்ஞு ஸர்வம் விடுகிலவன் விஶதாந்தரங்கனாய் மே லுடலிலமர்ன்னுழலுன்னதில்ல நூனம்                               (ஆத்மோபதேச சதகம் – பாடல் 30) அசைவற்றது அறிவதில்லை; அறிவுக்கோ எண்ணமில்லை அது ஏதும் உரைப்பதுமில்லை; அறிவே அனைத்துமென்றறிந்தபின்  அகம் எல்லையிலாது விரிகிறது  அகம் விரிந்தவன் உடலுள் சிறைப்பட்டுழலுவதில்லை * தாயின் கருவறைவிட்டு இவ்வுலகிற்கு வரும் குழந்தை அளவுக்கதிகமான வெப்பத்தையும், தண்மையையும், ஒளியையும்தான் முதலில் எதிர்கொள்கிறது. பிறவி என்பதே வலிமிக்கது. குழந்தை பெரும் அழுகையுடன்தான் இந்த உலகிற்கு அனுப்பிவைக்கப்படுகிறது. குழந்தையின் தொடக்ககால நடத்தைகளில்… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 30

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 29

மனமலர் கொய்து மஹேஶ பூஜ செய்யும் மனுஜனு மற்றொரு வேல செய்திடேண்ட வனமலர் கொய்துமதல்லயாய்கில் மாயா மனுவுருவிட்டுமிரிக்கில் மாய மாறும் (ஆத்மோபதேச சதகம் – பாடல் 29) மனமலர் கொண்டு இறைபோற்றுபவர் பிறிதொரு  வினையாற்ற வேண்டியதில்லை கான்மலர் கொய்க; இல்லையெனில் மாயையின் மந்திரம் ஓதவே மாயை மறையும் * முதல் பாடலிலேயே இரண்டு எதிரெதிர் உலகங்களை கண்டோம் – ஒன்று பொருட்களால் நிரம்பிய புற உலகு; மற்றொன்று எண்ணங்களாலும் புலனுணர்வுகளாலும் நிறைந்த நனவோடை போன்ற அக உலகு. … Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 29

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 28

அடிமுடியற்றடிதொட்டு மௌலியந்தம் ஸ்ஃபுடமறியுன்னது துர்ய போதமாகும்; ஜடமறிவீலது சிந்த செய்து சொல்லு ன்னிடையிலிருன்னறிவல்லறிஞ்ஞிடேணம் (ஆத்மோபதேச சதகம் – பாடல் 28) அடிமுடி இல்லாது, அடி முதல் முடி வரை தெள்ளென அறியப்படுவது துரிய நனவு ஜடம் அறிதலற்றது; இது புரிந்தபின் இடையில் இருப்பது அறிவல்ல என்றறிக! * முந்தைய பாடலில் அகம் என்பது, தன்னிலிருந்து தோன்றியதும் முழுமையான இருளில் தன்னை மறைத்துக்கொண்டிருப்பதுமான தூய நனவென வரையறுக்கப்பட்டது. இதிலிருந்து, தன்னையறியாத இருளொன்றும் தன்னை அறிந்ததாக முழுதறியும் ஒரு அறிவும்… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 28

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 27

இருளிலிருன்னறியுன்னதாகுமாத்மா வறிவதுதானத நாமரூபமாயும் கரணமொடிந்த்ரிய கர்த்த்ருகர்மமாயும் வருவது காண்க! மஹேந்திரஜாலமெல்லாம் (ஆத்மோபதேஶ ஶதகம் – பாடல் 27) இருளிலிருந்தபடி தன்னையறியும் அகம் அதறியும் அதன் பெயர் வடிவம் செயல் புலன் வினையென அனைத்தும் பெரும் மாயாஜாலம் சீட்டுக் கட்டில் முதலில் உள்ளது கோமாளியை குறிக்கிறது, இறுதியாக உள்ளது மந்திரவாதியை. கோமாளியில் தொடங்கி மந்திரவாதியில் முடிவதற்குள் நீதிபதி, மரணம் என வாழ்வின் பல கூறுகளைக் குறிக்கும் சீட்டுகளை நாம் காண்கிறோம். அதேபோல், நம் வாழ்வும் கற்றறியா கோமாளியில் துவங்கி… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 27