ஶ்ரீசக்ர தியானம் – 1

அம் காமாகர்ஷிணீ படைக்கும் தொழிலை பேரன்புடன் நிகழ்த்துபவளே! அன்னையே,  ஒத்திசைவு விதியென தன்னை வெளிப்படுத்திக்கொள்வதும், பரமேஶ்வரன் எனப்படுவதுமான முழுமுதலுக்கும் தொடர்ந்து எய்தப்பெறும் நலன்களுக்கும் இடையிலான பிணைப்பை உன்னில் நான் காண்கிறேன்.  நலன்கள் ஒவ்வொன்றும் உன் மனம் மயக்கும் தொடுகையால் அருளப்படுகின்றன. உன் தொடுகை கழி நிகழ் எதிர்வென்னும் முக்காலங்களையும் எழில்பெறச் செய்கிறது. மாறிக்கொண்டே இருக்கும் உருவங்களை உயிர்ப்பூட்டும் மீ ஆன்மாவே, பேரொளியே, உன் தாமரையடிகளுக்கு என் வணக்கம். நான் அப்பாவிதான், அறிவிலிதான் என்றாலும் பேரிறை மேல் நீ… Read More ஶ்ரீசக்ர தியானம் – 1

சௌந்தர்யலஹரீ – 1

ஶிவ: ஶக்த்யா யுக்தோ யதி ப*வதி ஶக்த: ப்ரப*விதும் ந சேதேவம் தேவோ ந க*லு குஶல: ஸ்பந்திதுமபி அதஸ்த்வாமாராத்*யாம் ஹரிஹரவிரிஞ்சாதிபி*ரபி ப்ரணந்தும் ஸ்தோதும் வா கத*மக்ருதபுண்ய: ப்ரப*வதி (பாடல் – 1) சக்தியுடன் இணைகையில்தான் சிவன் உருக்கொள்ளும் ஆற்றல் பெறுகிறான் தனியனாக துடிக்கும் ஆற்றலும் அவனுக்கிருப்பதில்லை என்றால் அரி அரன் அயன் முதலானோர் போற்றும் உன்னை சிறப்பொன்றும் அடையாதோர் வணங்குதலும் போற்றுதலும் எங்ஙனம்? ** படைத்தல், காத்தல், அழித்தல் எனும் முத்தொழிலின் உருவகங்களே கடவுளர் மூவர்.… Read More சௌந்தர்யலஹரீ – 1

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 24

அவனிவனென்னறியுந்நதொக்கெயோர்த்தா லவனியிலாதிமமாயொராத்மரூபம்; அவனவனாத்மசுகத்தினாசரிக்கு ந்நவயபரன்னு சுகத்தினாய் வரேணம்                                          (ஆத்மோபதேச சதகம் – பாடல் 24) அவன் இவன் என அறிபவையெல்லாம் அவனியில் ஒற்றை ஆதி வடிவாம் அவனவன் தன் நலனுக்காற்றுவதெல்லாம் அயலவன் நலனும் உவப்பின் உயர்வாம் நம்மைச் சுற்றிலும் நம்மைப் போன்றே உள்ள மாந்தரை பார்க்கிறோம். மானுடரின் சில… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 24

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 23

அபரனுவேண்டியஹர்ன்னிசம் ப்ரயத்னம் க்ருபணதவிட்டு க்ருபாலு செய்திடுந்நு க்ருபணனதோமுகன்னாய்க்கிடந்நு செய்யு ந்நபஜயகர்ம்மமவன்னுவேண்டி மாத்ரம்                                       (ஆத்மோபதேச சதகம் – பாடல் 23) பிறனுக்காக பகலிரவும் வினைபுரிபவன் தன்னலம்துறந்த அருளாளன் தனக்கென மட்டும் பயனற்றதை செய்பவன் தன்னலத்தில் அமிழ்பவன் ஒருவர் தன் வாழ்வை நோக்குகையில், அதில் கட்டமைப்பு சார்ந்த சில வரம்புகள் இருப்பதை பார்க்கிறார்.… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 23

தவறான இடத்தில் பதிட்டை செய்யப்பட்ட இறைவி

தவறான இடத்தில் பதிட்டை செய்யப்பட்ட இறைவி (ஒரு க்யோஜன் ஜப்பானிய நாடகம்) பதினைந்தாம் நூற்றாண்டில் ஜப்பானில் உருப்பெற்ற நகைச்சுவை நாடக வடிவம் க்யோஜன். மறைத் தன்மையே இதன் தனிச்சிறப்பு. 1380 முதல் 1460 வரையிலான முரோம்மாச்சி ஆட்சிக்காலத்தில் தொடங்கியது. நோஹ் என்னும் துன்பியல் நாடகங்களே ஜப்பானிய இலக்கியத்தின் செவ்வியல் நாடகங்கள். க்யோஜன் நாடகங்கள் தேசிய மரபுப்படி எழுதப்பட்டவை. அவற்றின் உள்ளோட்டம் கிண்டலை அடிப்படையாகக் கொண்டது. மாந்தரிடம் பொதுவாகக் காணப்படும் குறைகளை கிண்டல்செய்து அதன் மூலம் அவற்றை களைய… Read More தவறான இடத்தில் பதிட்டை செய்யப்பட்ட இறைவி

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 22

ப்ரியமபரன்றெயதென் ப்ரியம்; ஸ்வகீய ப்ரியமபரப்ரியமிப்காரமாகும் நயமதினாலெ நரன்னு நன்ம நல்கும் க்ரியயபரப்ரியஹேதுவாய் வரேணம் (ஆத்மோபதேச சதகம் : பாடல் 22) பிறன்நலம் என்நலமாகும் தன்நலம் பிறன்நலமாகும் தன்நலம் பயக்கும் செயலெல்லாம் பிறன்நலம் கருதல் வேண்டும் ஒரு புழுவானாலும் தியானத்தில் ஆழ்ந்திருக்கும் யோகியானாலும் ஒரு ஜீவராசியின் வாழ்வை கவனித்தால் அதன் அனைத்துச் செயல்களும் இன்ப வேட்கையால் தூண்டப்படுபவையே என்பது தெரியும். தூண்டல்கள் தன்னுணர்வுடனும் தோன்றலாம், நனவிலி நிலையிலும் தோன்றலாம். இங்கு அமர்ந்திருக்கையில் நிலைமாறி அமர்வதுகூட இன்னும் வசதியுடன் இருப்பதற்காகத்தான்.… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 22

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 21

ப்ரியமொரு ஜாதியிதென்ப்ரியம் த்வதீய ப்ரியமபர ப்ரியமென்னநேகமாயி ப்ரியவிஷயம் ப்ரதி வன்னிடும் ப்ரமம்; தன் ப்ரியமபர ப்ரியமென்னறிஞ்ஞிடேணம் (ஆத்மோபதேச சதகம் – பாடல் 21) ஒன்றென இருக்கும் விருப்பை  எனதென உனதென பிறனதென பிரிக்கையில் வருவது குழப்பம் தன்விருப்பே பிறன் விருப்பும்  அனுபவம் என்பது அக அனுபவம் புற அனுபவம் என்று இருவகைப்படும். புற உலகில் நாம் பொருட்களுடனும், மக்களுடனும், பல்வேறு வகையான நிகழ்வுகளுடனும் இடைவினையாற்றுகிறோம். அகத்தில் எண்ணங்களை ஓம்புகிறோம்; நினைவுகளை மீட்டெடுக்கிறோம்; சில புலனனுபவங்களை பெறுகிறோம். இவ்வெல்லா… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 21

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 20

உலகினு வேறொரு ஸத்தயில்லதுண்டெ ன்னுலகருரப்பது ஸர்வமூஹஹீனம்; ஜளனு விலேசயமென்னு தோன்னியாலும் நலமியலும் மலர்மால நாகமாமோ? (ஆத்மோபதேச சதகம் – பாடல் 20) இவ்வுலகன்றி பிறிதொரு மெய்மையில்லை உண்டென்று உலகோர் உரைப்பது சிந்தனையின்மையால் பாம்பென்று மூடனுக்கு தோன்றினாலும் நன்மலர்மாலை நாகமாகுமோ? சில நேரங்களில் நாம் வாழும் இவ்வுலகு இருண்டதாகத் தோன்றுகிறது. இதை துறந்து எங்காவது ஓடிவிடவேண்டுமென்று நினைக்கிறோம். அனைத்தும் எங்ஙனம் இருக்கவேண்டுமோ அப்படியே இருக்கக்கூடிய பிறிதொரு உலகு இருக்கிறது என்று எண்ணுகிறோம். “பாழாய்ப் போன இவ்வுலகை விட்டு ஆன்மீகம்… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 20

கலையின் பிறப்பு ரகசியம்

கலையின் பிறப்பு ரகசியத்தை தெரிந்துகொள்ள ஸ்ரீசக்ரத்தை நுட்பமாக நோக்கி அறிதல் வேண்டும். ஸ்ரீ சக்ரத்தில் நாம் முக்கியமாக காண்பது ஒரு புள்ளியும் அதைச் சுற்றி நிற்கும் ஒரு கலையும். புள்ளியிலிருந்துதான் ஒலி அலை பொங்கிப் பரவுகிறது. ஒரு புள்ளியில் தோன்றும் ஈர்ப்பே இணைப்பாகிறது. புள்ளியிலிருந்து பாயும் கதிரே ஒளிமழையாகி தொலைவுவரை நீண்டு செல்கிறது.  நூற்றுக்கணக்கான புள்ளிகளில் உண்டாகும் உராய்வே வாசனையாகிறது. ஒரு புள்ளியைச் சுற்றி உண்டாகும் விட்டமே கலை. ஒலியிலும் தொடுகையிலும் உருவிலும் ருசியிலும் மணத்திலும் இருப்பது… Read More கலையின் பிறப்பு ரகசியம்

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 19

அடிமுடியற்றமதுண்டிதுண்டதுண்டெ ன்னடியிடுமாதிமஸத்தயுள்ளதெல்லாம் ஜடமிது ஸர்வமநித்யமாம்; ஜலத்தின் வடிவினெ விட்டு தரங்கமன்யமாமோ?                                                           (ஆத்மோபதேச சதகம் – பாடல் 19) அடி, முடி, அற்றம், அது உண்மை, இது உண்மை, அல்ல அது என்று வாதிடுவர்; முழுமுதல் மெய்யொன்றே… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 19