ஶ்ரீசக்ர தியானம் – 11

ரும் ரஸாகர்ஷிணீ அன்னையே, அனைத்திலும் நீ களிப்படைகிறாய். அனைத்துயிர்களின் களிப்பெனவே திகழ்கிறாய் நீ. மையப் புள்ளியிலிருந்து மெய்நகர்வின்றி மாயமான முறையில் நகர்கிறாய். அதன் வழியே கோடுகளையும் முக்கோணங்களையும் வட்டங்களையும் ஏற்படுத்துகிறாய். எளியதும் சிக்கலானதுமான அனைத்து வடிவத் தோற்றங்களையும் உண்டாக்குகிறாய். உனது எண்ணற்ற மண்டலங்களே இந்தப் பேரண்டமெனத் திகழ்கின்றன. எனது மொழி கொண்டு நான் உன்னை போற்றுகையில் நான்கு சிவதத்துவங்களின், ஐந்து சக்திதத்துவங்களின் சாரமெனவே உன்னை காண்கிறேன்.  அன்னையின் மடியிலிருக்கையில் குழந்தை மெய்மறந்து கிடக்கிறது. அந்த மகிழ்வு அச்சமின்மையில்… Read More ஶ்ரீசக்ர தியானம் – 11

சௌந்தர்யலஹரீ – 11

சதுர்பி*: ஶ்ரீகண்டை*: ஶிவயுவதிபி*: பஞ்சபி*ரபி ப்ரபி*ன்னாபி*: ஶம்போ*ர்னவபி*ரபி மூலப்ரக்ருதிபி*: சதுஶ்சத்வாரிம்ஶத்வஸுதலகலாஶ்ராத்ரிவலய த்ரிரேகா*பி*: ஸார்த*ம் தவ ஶரணகோணா: பரிணதா: பாடல் – 11 நான்கு சிவசக்ரங்களும் ஐந்து சக்திசக்ரங்களும் (மைய பிந்துவான ஶம்பு தவிர்த்து) ஒன்பது ஆதி இயற்கையாகவும் மூன்று வட்டங்களுக்குள் அமைந்த எட்டு இதழ்கள் கொண்ட ஒரு தாமரையும் பதினாறு இதழ்கள் கொண்ட ஒரு தாமரையும் படிநிலைகளெனவும் ஆறு கோடுகளுடன் இந்நாற்பத்திமூன்றும் சேர்ந்து உன் இல்லமென்றாகின்றன.  ** முந்தைய பாடல்களில் தனி உயிரியின் பிண்ட அடித்தளம் (microcosmic… Read More சௌந்தர்யலஹரீ – 11

ஶ்ரீசக்ர தியானம் – 10

ரூம் கந்தா*கர்ஷிணீ என்றும் மகிழ்ந்திருக்கும் அன்னையே, அனைத்து உதடுகளிலும் புன்னகையாக இருப்பது நீயே. எல்லா இதயங்களிலும் சிலிர்ப்பென விளங்குவது நீ. முகிழ்த்து உதிர்ந்த பிரபஞ்ச சுழற்சிகள் அனைத்தின் அழிவற்ற சாரமும் அவற்றின் நடைமுறை, கனவு, ஆழுறக்கம், (அறிவெல்லை) கடந்த நிலை என்ற நால்வேதங்களில் உள்ளது. இந்த நான்கு மறைகளிலிருந்து உன் படைப்புக்கான கருத்துகளை எடுத்துக்கொள்கிறாய். அது பல்வண்ணக் காட்சிக் கருவி போல (kaleidoscope) புத்தம் புது வடிவில், தனிச்சிறப்பான வண்ணக்கலவையாக, ஆழ்படிமங்களுக்கு புதிய அர்த்தங்கள் தருவதாக இருக்கிறது.… Read More ஶ்ரீசக்ர தியானம் – 10

சௌந்தர்யலஹரீ – 10

ஸுதா*தா*ராஸாரைஶ்சரணயுகலாந்தர்விகலிதை: ப்ரபஞ்சம் ஸிஞ்சந்தீ புனரபி ரஸாம்னாயமஹஸ: அவாப்ய ஸ்வாம் பூ*மிம் பு*ஜகனிப*மத்*யுஷ்டவலயம் ஸ்வமாத்மானம் க்ருத்வா ஸ்வபிஷி குலகுண்டே குஹரிணி பாடல் – 10 அன்னையே உடலில் நீ குண்டலினீயாக இருக்கிறாய் நாடிகளின் அடித்தளத்தில் நாக வடிவில் ஒரு மண்டலத்தை உருவாக்கி  அதை உன் இல்லமெனக் கொண்டு அந்தக் குழிவில் உறங்குகிறாய் உன் கால்விரல் நுனிகளிலிருந்து சொட்டும்  அழிவின்மையெனும் அமுதமே  உன்னை நீராட்டும் ஆனந்தம் பிரபஞ்சத்தை வளமூட்டும் முப்புரப்பேரழகி நீயே ** இந்தப் பாடலில் குண்டலினீ, நாடிகள் மற்றும்… Read More சௌந்தர்யலஹரீ – 10

ஶ்ரீசக்ர தியானம் – 9

ல்ரும் சித்தாகர்ஷிணீ கண்டுமகிழ கண்களிரண்டையும், முகர்வதற்கு மூக்கையும், ஒவ்வொரு நாளும் மாயமென எம் முன் இலையில் வந்தமரும் அறுசுவை உணவை ருசிக்க வாயொன்றையும் எமக்களித்திருக்கிறாய். எம் அகத்தில் பொங்கும் அன்பை எப்படி பிறரிடம் செலுத்த முடிகிறதோ அதேபோல் பிற உயிர்கள் எம்மிடம் காட்டும் அன்பையும் எளிதில் ஏற்கும் இதயங்களை எமக்கு கொடுத்திருக்கிறாய். உனது தேன் எம் நாவில் திகழ்கிறது. நாங்கள் சொல்லெடுக்கையில் உன் அன்பின் இனிமை பொழிகிறது. எம் இதயத்தின் மையத்தில் அமர்ந்தபடி எம் வாழ்வை நடத்திச்… Read More ஶ்ரீசக்ர தியானம் – 9

சௌந்தர்யலஹரீ – 9

மஹீம் மூலாதா*ரே கமபி மணிபூரே ஹுதவஹம் ஸ்தி*தம் ஸ்வாதி*ஷ்டா*னே ஹ்ருதி மருதமாகாஷமுபரி மனோஅபி ப்*ரூமத்*யே ஸகலமபி பி*த்வா குலபத*ம் ஸஹஸ்ராரே பத்மே ஸஹ ரஹஸி பத்யா விஹரஸே பாடல் – 9 மூலாதாரத்தில் நிலத்தையும், மணிபூரகத்தில் நீரையும் ஸ்வாதிஷ்டானத்தில் நெருப்பையும், இருதயத்தில் காற்றையும் மேலே விண்வெளியையும் புருவமத்தியில் வைக்கப்பட்ட மனதையும் ஊடுருவி ஆயிரமிதழ்த் தாமரையில் உன்னிறையுடனான ஆடலை நிகழ்த்துகிறாய் ** முந்தைய பாடலில் தனியரின் ஆன்மாவுக்கும் பிரபஞ்ச ஆன்மாவுக்குமான உறவு பொதுமையம் கொண்ட ஏழு வட்டங்களால் ஆன… Read More சௌந்தர்யலஹரீ – 9

ஶ்ரீசக்ர தியானம் – 8

ல்ரீம் தை*ர்யாகர்ஷிணீ தாயே, வலிமையும் வீரமும் நிறைந்த சிங்கத்தின் மீது ஊர்பவள் நீ. சிவன் எனும் வடிவான இருக்கையில் அமர்ந்திருக்கிறாய். பரமேச்வரனின் மடி உன் அரியணை. அரசியருக்கெல்லாம் பேரரசி நீ. உன் சிறுவிரல் பற்றி உன்னைத் தொடரும் என்னை அச்சம் என்பது நெருங்குமோ? விண்வெளியில் ஒளிரும் பகலவன் மண்ணின் மீது திகழும் ஒவ்வொரு உயிரினமும் இயங்கும்படி சூரிய ஆற்றலை பொழிகிறான். ஓம் எனும் மந்திரத்தின் வடிவெடுத்தவள் நீ. உன் ஒளியைக் கொண்டு நாங்களும் ஒளிர்கிறோம். உன் ஞானமெனும்… Read More ஶ்ரீசக்ர தியானம் – 8

சௌந்தர்யலஹரீ – 8

ஸுதா*ஸிந்தோ*ர்மத்*யே ஸுரவிடபிவாடீபரிவ்ருதே மணித்வீபே நீபோபவனவதி சிந்தாமணிக்ருஹே ஶிவாகாரே மஞ்சே பரமஶிவபர்யங்கநிலயாம் ப*ஜந்தி த்வாம் த*ன்யா: கதிசன சிதானந்தலஹரீம் பாடல் – 8 எல்லையிலா அமுதக்கடல் நடுவே  முத்துத் தீவில் அமைந்த  கடம்ப மரச் சோலையில் கற்பக மரங்கள் சூழ எழுப்பப்பட்ட நனவெனும் அருமணி இல்லத்தில்  சிவ உருவிலான சேக்கையில் இடப்பட்ட  பரமசிவன் எனும் மெத்தைமேல்   அமர்ந்திருப்பவளான உன்னை  மீஆன்மாவின் பேரானந்தமென எண்ணி  ஊழ்கத்தில் ஆழ்கின்றனர் அரிய நிறைவாழ்வு பெற்ற சிலர். ** ஏழு வட்டங்களாலான ஒரு மண்டலத்தை… Read More சௌந்தர்யலஹரீ – 8

ஶ்ரீசக்ர தியானம் – 7

எம் ஸ்ம்ருத்யாகர்ஷிணீ தாயே! தூய நனவின் தெளிவு நீ. பிரபஞ்ச நினைவின் காந்தப் புலம் நீ. பகலிலும் இரவிலும் செய்ய வேண்டியவற்றை நிரை மாறாமல் நினைவில் வைத்திருக்கும் இல்லாளைப் போல நீ பரிவுகாட்டுகிறாய். ஒவ்வொருவரும் உன் குழந்தையென, ஒவ்வொரு வீடும் உன் இல்லமெனக் கருதி முழு உலகையும் ஒன்றேபோல் புரக்கிறாய். எதிர்வரும் காலத்தில் நின்றபடி, நினைவுத் தளிர்களை நிகழ்காலத்திற்கு அனுப்புகிறாய். இவ்வாறாக, ஒரே சமயத்தில் கடந்தகாலத்தை அணிசெய்து, நிகழ்காலத்தை எழில்பெறச் செய்து, துடிப்புடன் மலரும் எதிர்காலமாக இருக்கிறாய்.… Read More ஶ்ரீசக்ர தியானம் – 7

சௌந்தர்யலஹரீ – 7

க்வணத்காஞ்சீதாமா கரிகலப*கும்ப*ஸ்தனனதா பரிக்ஷீணா மத்*யே பரிணதஶரச்சந்த்ர வதனா த*னுர்பாணான் பாஶம் ஸ்ருணிமபி ததா*னா கரதலை: புரஸ்தாதாஸ்தாம் ந: புரமதி*துராஹோபுருஷிகா பாடல் – 7 புரமெரித்தவனின் தன்முனைப்பே வடிவானவள் கரிமத்தகம் ஒத்த முலைகளோடு முன் ஒசிந்து மெல்லிய இடையும் முழுநிலவொத்த முகமும் கொண்டு வில்லும், அம்பும், கயிறும், கொக்கியும் ஏந்தி எம் முன் எழுந்தருளட்டும் ** பருண்மை, நுண்மை, அறிவெல்லை கடந்த நிலை என்ற மூன்று பண்புகளும் கொண்ட கடவுளாக அன்னையானவள் வணங்கப்படுகிறாள். இந்தப் பாடல் அவளது பருண்மை… Read More சௌந்தர்யலஹரீ – 7