மரணத்தை எதிர்கொள்ளல் – 5

மரணத்தைப் பற்றிய மிகச் சிறந்த புத்தகம் ‘கதா உபநிஷத்’.  அந்த அற்புதக் கதையில் ஒரு சிறுவன் மரணத்துக்கு எதிராக நிறுத்தப்படுகிறான்.  ஒரு புறம், இடைவிடாத ஆக்கம், வாழ்க்கையின் இயக்கம் ஆகியவற்றின் பிரதிநிதியான அச்சிறுவன் எல்லா சாத்தியக்கூறுகளையும் கண்ணுறுகிறான்.  திடீரென்று இந்தப் புலன் சார்ந்த விளையாட்டு சுவாரஸ்யமற்று இருப்பதாக அவன் கருதுகிறான்.  இதற்கு மாறாக அவன் புலன்களைக் கடந்த நிலையைப் பற்றி சிந்திக்கிறான்.  எனவே, வாழ்வும் மரணமும் ஒரு பக்கம், கடந்த நிலைக்கான சாத்தியம் இன்னொரு பக்கம்.  கடந்த… Read More மரணத்தை எதிர்கொள்ளல் – 5

மரணத்தை எதிர்கொள்ளல் – 4

என்னுடைய மரணத்தின்போது நான் வலியுறுத்திச் சொல்லும் முதல் விஷயம், எந்தவித மந்திர உச்சாடனமோ அல்லது வேறு வகையான சூழலுக்குக் கேடு விளைவிக்கும் கூச்சலோ இருக்கக்கூடாது என்பதுதான்.  மக்கள் அவரவர் வேலையைப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும்.  சடலத்தை அப்படியே கிடக்கவிட்டால் கொஞ்ச நேரத்தில் நாற்றமடிக்க ஆரம்பித்துவிடும்.  எனவே, அதை உரிய வகையில் அப்புறப்படுத்த வேண்டும்.  இதில் பலமுறைகளைப் பற்றி நான் யோசித்து வருகிறேன்.  அதை எரித்துவிடுவது ஒருவகை.  ஆனால், ‘நான் இறந்துவிடும்போது நான் முழுமையாக இறந்திருக்கிறேனா?’ என்ற கேள்வி என்… Read More மரணத்தை எதிர்கொள்ளல் – 4

மரணத்தை எதிர்கொள்ளல் – 3

மரணம் என்ற பொருள், விவாதத்திலிருந்து விலக்கப்பட்ட ஒன்றாகவே இருந்து வருகிறது.  குறிப்பாக சில பெண்களுக்கு முன்னால் நீங்கள் மரணத்தைப் பற்றி பேசினால் அவர்கள் உங்கள் வாய்மேல் கையை வைத்து, ‘மரணத்தைப் பற்றி பேசாதீர்கள், வேறு ஏதாவது நல்ல விஷயத்தைப் பற்றி பேசுங்கள்’ என்று சொல்கிறார்கள்.  இதே நபர்களே அடிக்கடி ஒருவனின் மரணத்துக்கு மிகச் சிறந்த காரணகர்த்தாக்களாகவும் இருக்கிறார்கள்.   அண்மையில், இறந்துகொண்டிருந்த ஒருவரின் பக்கத்தில் இருந்தேன்.  அவருடைய மாமியார் பக்கத்தில் உட்கார்ந்து கடவுள், சொர்க்கம், மற்றும் மரணத்துக்குப்பின் ஆன்மாவுக்கு… Read More மரணத்தை எதிர்கொள்ளல் – 3

மரணத்தை எதிர்கொள்ளல் – 2

நம்முடைய எந்தப் பகுதி உண்மையில் ‘நாம்’?  அது நாம் உண்ணும் உணவா, நம்முடைய எலும்புகளின் மஜ்ஜையாக மாறும் உணவு ஊட்டமா, நம் மூளையின் செல்களா, அல்லது நம்முடைய மத்திய நரம்பு மண்டலமா, அல்லது நம்முடைய தசைகளா?  நாம் யாராக இருக்கிறோம் என்பதைப் பெரிதாகக் குறைக்காமல் நம்முடைய சில பகுதிகளை நீக்கிவிட முடியும்; வேறு சில பகுதிகளை நீக்கினால் நாம் இறந்துவிடுவோம்.  இரண்டாவதாகச் சொன்னதை ‘நாம் யாராக இருக்கிறோம்’ என்பதைத் தீர்மானிக்கும் முக்கிய அம்சங்களோடு இணைத்துப் பார்க்க வேண்டும்.… Read More மரணத்தை எதிர்கொள்ளல் – 2

மரணத்தை எதிர்கொள்ளல் – 1

‘மரணம்’ – இந்த வார்த்தையைவிட அதிகம் அச்சம் தருகிற, ஓயாமல் நினைவில் ஊடாடிவருகிற, வஞ்சகமான பயங்கரம் நிரம்பிய வேறு வார்த்தை கிடையாது.  அது இறுதியும், முழுமையும் கொண்டது.  இருந்தும் பலருக்கு மரணம் ஓர் ஆறுதல்; அவர்களின் எல்லாத் தொல்லைகளையும் முடிவுக்குக் கொண்டுவருகிற ஒரு வாக்குறுதி. மரணத்தைக் கண்டு பயப்படுகிறவனுக்கும், அதை விரும்பி நாடுகிறவனுக்கும் மரணம் நேர்கிறது.  மரணத்தைவிட நிச்சயமான விஷயம் இந்த உலகத்தில் வேறெதுவும் இல்லாவிட்டாலும் நிறையப் பேர் அதைப் பற்றி சிந்திக்க விரும்புவதில்லை.  எனவே, அது… Read More மரணத்தை எதிர்கொள்ளல் – 1