ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 34

அரநொடியாதியராளியார்ன்னிடும் தே ருருளதிலேரியுருண்டிடுன்னு லோகம்; அறிவிலநாதியதாய் நடன்னிடும் தன் திருவிளயாடலிதென்னறிஞ்ஞிடேணம்                                                         (ஆத்மோபதேச சதகம் – பாடல் 34) அரைநொடி முதலாய ஆரக்கால்கள்கொண்ட தேருருளைகளின் மேலமர்ந்து உருளும் உலகு அறிவிலெப்போதும் நிகழும் முதலென்பதில்லா திருவிளையாடல் இது * நாம் உணரும் உலகு பற்றி எண்ணிப்பார்க்கும்போது, நம்மைச் சுற்றிலும் பெருவெளி ஒன்றிருப்பது நமக்குத் தெரிகிறது. ஒரு வெளியின் மையத்திலேயே நாம் எப்போதும் இருக்கிறோம். அங்கிருந்து எத்திசையில் நோக்கினாலும் தொடுவானம் ஒரே தொலைவில்தான் இருக்கும். தொடுவானை நாம் ஒருபோதும் நெருங்க முடியாது;… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 34

நேர்காணல் – 5

3.2.1996 சென்ற முறை வந்தபோது இந்தியச் சிந்தனை முறையின் தனித்தன்மை பற்றிச் சொன்னீர்கள்.  நமது தத்துவ மரபிற்கும் மேற்கின் தத்துவ மரபிற்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன? பிலாசபி என்ற சொல்லையோ அதன் உட்பிரிவுகளையோ அடிப்படையாகக் கொண்டு நாம் நமது சிந்தனைகளை ஆராயக்கூடாது.  கீழைச் சிந்தனை முறை அடிப்படையில் வேறு.  துரதிர்ஷ்டவசமாக நமது கல்வித்துறை அடிப்படையில் மேற்கத்தியத் தன்மை கொண்டது.  ஆகவே இன்று மேற்குடனான வித்தியாசம் என்ற அளவிலேயே நாம் நமது சிந்தனையைப் பார்க்க வேண்டும். பிலாசபி… Read More நேர்காணல் – 5

நேர்காணல் – 1

31.12.95 காலை பிரார்த்தனை வகுப்பு முடிந்துவிட்டது.  மாணவர்கள் பலர் கிளம்பிச் சென்றுவிட்டனர்.  நித்ய சைதன்ய யதி ஒரு மாணவரின் தோளைப் பற்றியபடி விருந்தினர்களை சந்திக்கும் பகுதிக்கு வருகிறார்.  விசாலமான கூடத்தின் ஒரு பகுதி பிரார்த்தனைக்கும், மறுபகுதி விருந்தினர்களுக்கும் ஒதுக்கப்பட்டிருந்தது.  இப்பகுதியின் ஒரு பக்க கண்ணாடிச்சுவர் வழியாக குருகுலத்தின் சிறுகட்டிடங்களும் தேயிலைச்செடிகளும் சில ஓட்டு வீடுகளும் தெரியும்.  யதி தந்த நிறத்தில் ஸ்வெட்டர் அணிந்திருக்கிறார்.  தூய வெண்ணிறத் தாடியும் தலைமயிரும் சிலுசிலுக்கின்றன.  காது கேட்பானைப் பொருத்தியபடி என்னைப் பார்த்துப்… Read More நேர்காணல் – 1