இந்துமதம் – 2. நமது கோயில்கள்

வெளியுலக வாழ்வில் மதச்சடங்குகள், ஆசாரங்கள் போன்றவற்றை ஏற்பவர்களையும் நிராகரிப்பவர்களையும் நாம் அன்றாடம் காணமுடிகிறது.  ஆனால், நம் அனைவரின் வாழ்வும் குறைந்தபட்ச ஆன்மீகப் பாதையில்தான் சஞ்சரித்துக்கொண்டிருக்கிறது என்ற உண்மை பெரும்பாலும் நம் கவனத்திற்கு வருவதில்லை.   ஒருவரின் வெளி நடத்தையைக்கொண்டு அவர் நம்பிக்கையைத் தீர்மானிப்பது மிகவும் மேலோட்டமான போக்கு.   அனைத்து நிறுவன மதங்களையும், இறையியல் கோட்பாடுகளையும் ஒருங்கே நிராகரிக்கும் ஒருவர் அவரது உள்ளத்தில் பேருவகைகளின் ஊற்றை உணரும் தருணங்கள் அமையலாம்.  அது அவரது ஆளுமையின் உருவாக்கத்தில்,  நடத்தையில் சீரிய ஒழுக்கத்தை மறு தொகுப்பு செய்துகொள்வதின் ஆதாரப்புள்ளியாகிறது. … Read More இந்துமதம் – 2. நமது கோயில்கள்