ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 34

அரநொடியாதியராளியார்ன்னிடும் தே ருருளதிலேரியுருண்டிடுன்னு லோகம்; அறிவிலநாதியதாய் நடன்னிடும் தன் திருவிளயாடலிதென்னறிஞ்ஞிடேணம்                                                         (ஆத்மோபதேச சதகம் – பாடல் 34) அரைநொடி முதலாய ஆரக்கால்கள்கொண்ட தேருருளைகளின் மேலமர்ந்து உருளும் உலகு அறிவிலெப்போதும் நிகழும் முதலென்பதில்லா திருவிளையாடல் இது * நாம் உணரும் உலகு பற்றி எண்ணிப்பார்க்கும்போது, நம்மைச் சுற்றிலும் பெருவெளி ஒன்றிருப்பது நமக்குத் தெரிகிறது. ஒரு வெளியின் மையத்திலேயே நாம் எப்போதும் இருக்கிறோம். அங்கிருந்து எத்திசையில் நோக்கினாலும் தொடுவானம் ஒரே தொலைவில்தான் இருக்கும். தொடுவானை நாம் ஒருபோதும் நெருங்க முடியாது;… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 34

இருப்பும் அறிதலும் – 1

மனிதனின் அறிவும், விருப்பமும் எப்படி இருந்தாலும் அவை பொருண்மைகளை எவ்வகையிலும் பாதிப்பதில்லை; அனைத்து அகவய இயக்கங்களிலிருந்தும் விலகி பிரபஞ்சப் பொருண்மை சுதந்திரமாக இருக்கிறது, இயங்கிக்கொண்டிருக்கிறது என்ற கருத்து மனிதன் சிந்திக்கத் தொடங்கிய காலம் முதல் உள்ளது.  ஆனால் உண்மை அதுவல்ல.  அறிதலுக்கு வெளியே என்னதான் இருந்தாலும் அவற்றின் இருப்பு அறிதலினூடாகவே உருவாகிறது.  இருப்பும் அறிதலும் வேறு வேறல்ல. எனவே அந்தரங்க அறிதலும் பொருண்மையும் ஒன்றுதான் என்று கூறும் ஒரு தத்துவ தரிசனமும் வெகு காலமாக மேலை, கீழை… Read More இருப்பும் அறிதலும் – 1