ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 5

உலகத்தோர் உறங்குவதையும் விழிப்பதையும் எண்ணுவதையும் உற்றுநோக்கி நிற்கும் ஏற்றப்படாததும் எப்போதும் அணையாததுமான விலைமதிப்பில்லா விளக்கை கண்டறிந்து முன் செல்வோம்.                                                                       (ஆத்மோபதேச சதகம் – பாடல் 5) பிரித்தானிய தத்துவவியலாளர்… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 5

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 4

அறிவும் அறிந்திடும் பொருளும் அறிபவன் தன்னறிவும் எல்லாம் முழுமுதல் மட்டுமேயாம் மயக்கம் நீங்கி விளங்கிடும் உயர்வாம் அறிவிலமர்ந்து அதுமட்டுமாதல் வேண்டும்                                                                          (ஆத்மோபதேச சதகம் – பாடல்… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 4

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 3

புறத்தில் இருப்பதும் அகம் உணர்வதுமான வெளி முதலான பூதங்களைந்தும் ஆழிச்செல்வத்தில் எழும் அலைகள் போல தம்மில் பேதமின்றித் தோன்றிடல் வேண்டும்                                                                                  [ஆத்மோபதேச சதகம்… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 3

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 2

ஆன்மாவும் புலன்களும் உடலும் தொட்டறியும் பல்லுலகும் எல்லாம் எண்ணுங்காலை பரவெளியில் உயர்ந்தொளிரும் கதிரவனின் திருவுருவென்று தேடலினால் தெளிந்திடுவோம்.                                                                                    … Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 2

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 1

அறிவிலுமேறி அறிஞ்ஞிடுன்னவன் தன்னுருவிலுமொத்து புறத்துமுஜ்வலிக்கும் கருவினு கண்ணுகளஞ்சுமுள்ளடக்கி த்தெருதெரெ வீணு வணங்கி ஓதிடேணம்                           [ஆத்மோபதேச சதகம் – பாடல் 1]   அறிவினையும் கடந்து அறிபவனின் அகத்தும் புறத்தும் பேரொளியுடன் ஒளிரும் கருவினை  புலனைந்தும் உள்ளடக்கி மீண்டும் மீண்டும் வீழ்ந்து வணங்கியோதிடுவோம்   ‘அறிவிலுமேறியறிஞ்ஞிடுன்னவன்’ (செயலறிவையும் கடந்து அறிபவன்) என்று தொடங்குகிறது முதல் பாடல்.  செயலறிவு என்பது ஒன்றை சொந்த அனுபவம் மூலமோ நேரடிப்… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 1

இருப்பும் அறிதலும் – 3

19-ஆம் நூற்றாண்டின் பெளதிகவாத சிந்தனையின் சிறந்த தொகுப்பாக நாம் ஹோல்பாக் (Holback) எழுதிய ‘இயற்கையின் அமைப்பு’ (System of Nature) என்ற நூலைக் கருதலாம்.  இந்நூல் இன்றுகூட ஒரு கிளாசிக் என்ற எண்ணம் எனக்குண்டு.  கருத்துமுதல் வாதத்தை கடுமையாக எதிர்க்கும் ஹோல்பாக் ‘அது ஒருவிதத்தில் அல்லது மற்றொரு விதத்தில் புலன்களுக்குச் சிக்குவது எதுவோ அதுவே பொருள்’ என்று நிர்ணயிக்கிறார்.  அடுத்த தலைமுறையின் முதன்மையான பெளதிகவாத சிந்தனையாளர் லாப்லேஸ் (Laplace) ஆவார். அவர் வழியாகவே பெளதிகவாதம் ஒரு மெய்காண்… Read More இருப்பும் அறிதலும் – 3

நடராஜ குருவும் நானும் – 12

குரு சோமனஹள்ளிக்கு வந்த மறுநாள், ஒற்றை அறை கொண்ட குடிசையை விரிவுபடுத்த ஒரு சமையலறையை வடிவமைத்தார்.  அதை அரை வட்ட வடிவில் அமைப்பது அவருடைய திட்டம்.  குடிசையிலிருந்து புதிய சமையலறைக்குச் செல்ல கதவு ஏதும் கிடையாது.  சுவரில் இருந்த ஒரு திறப்புதான் வழி.  வடிவத்தை முடிவு செய்த பின்னர், ஒரு வாளியை எடுத்துக்கொண்டு ஆற்றை நோக்கி நடந்தார் குரு.  என்னையும் ஒரு வாளியை எடுத்துக்கொண்டு வரச்சொன்னார்.  வாளியில் கற்களை சேகரித்துக்கொண்டு கட்டட வேலை நடக்குமிடத்திற்கு வந்தோம்.  எங்களைப்… Read More நடராஜ குருவும் நானும் – 12

நோயை எதிர்கொள்ளல்

அதிர்ஷ்டம் தரும் திடீர் வாய்ப்பு இன்று அதிர்ஷ்டம் தரும் ஒரு திடீர் வாய்ப்பு பற்றி பேச விரும்புகிறேன்.  மக்கள் பொதுவாக மூன்று வகையான நோய்கள் குறித்து அச்சப்படுகிறார்கள்.  இதயநோய், புற்றுநோய் மற்றும் பக்கவாதம்.  ஒரு நபருக்கு மாரடைப்பு ஏற்படும்போது அவர் பிழைப்பாரா என்று சொல்ல முடியாது.  மாற்றுப்பாதை அறுவை சிகிச்சை அல்லது வேறு ஏதோ என்றால் அவர் பிழைத்தாலும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் சிறிது காலமே உயிர் வாழக்கூடும்.  ஆனால், மாரடைப்பு எப்படி வந்தது என்பது… Read More நோயை எதிர்கொள்ளல்

நேர்காணல் – 9

அறிவு எப்படி உள்முரண்கள் கொண்டதாக இருக்கிறது? யதார்த்தத்திற்கும் பரமார்த்தத்திற்கும் இடையே ஓர் இடைவெளி உள்ளது.  உலகில் எங்கும் பிரச்சினைகளுக்குக் காரணமாக உள்ளது இந்த இடைவெளிதான்.  இடையே பாலங்கள் இல்லை.  அறிவென்பது அப்படியொரு பாலத்தைக் கட்டும் முயற்சிதான்.  ஒருவன் அறிவையே தன் இறுதி இலக்காகக் கொள்வானானால் அவன் அடைவது ஏதுமில்லை.  ஆகவே ‘அறியாமையை வழிபடுபவன் இருளில் இருக்கிறான்; அறிவை வழிபடுபவன் அதைவிடப் பெரிய இருளில் இருக்கிறான்’ என்று நாராயண குரு சொன்னார்.  யதார்த்தமும் பரமார்த்தமும் மோதும்போது புதிர்கள் பிறக்கின்றன.  ஒபன்ஹியுமரின் பிரபலமான புதிர் ஒன்று… Read More நேர்காணல் – 9

நடராஜ குருவும் நானும் – 7

இதற்கிடையில், கேரளாவில் ராமகிருஷ்ண மடத்தையும் பல கல்வி நிறுவனங்களையும் நிறுவிய சுவாமி ஆகமானந்தா என் கல்லூரி முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் என்னை ஒரு கருங்காலி என்றும், கல்லூரியை அழிக்கும் நோக்குடன், பிராமணர்களை வெறுக்கும் டாக்டர் நடராஜனால் நான் அங்கு அனுப்பப்பட்டேன் என்றும் எழுதியிருந்தார்.  இக்கடிதம் சுவாமி நிஶ்ரேயஸானந்தாவிடம் ரகசியமாகக் காட்டப்பட்டது.  அவர் என்னிடம் அதைக் காட்டினார்.  இக்கடிதத்தால், ‘ராமகிருஷ்ண மடத்தில் ஜாதி வெறி இருப்பதாக குரு நினைப்பது தவறோ?’ என்ற என் சந்தேகம் முற்றிலும்… Read More நடராஜ குருவும் நானும் – 7