ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 47

ஒருமதமாகுவதின்னுரப்பதெல்லா வருமிது வாதிகளாருமோர்க்குவீல; பரமதவாதமொழிஞ்ஞ பண்டிதன்மா ரறியுமிதின்றெ ரஹஸ்யமிங்கஶேஷம் (ஆத்மோபதேஶ ஶதகம் – பாடல் 47) எல்லோரும் சொல்வது ஒருமதமாதலே தம்மதம்பரப்புவோர் இதை எண்ணுவதில்லையே பிறர்மதம் மறுக்காத அறிஞர் இம்மறையை அறிவர் குறைவொன்றுமின்றியே * இப்பாடலின் முதன்மைச் சொல் ரகசியம்-மறை என்பது. அறிவர் அறிந்ததும், மதம் பரப்புவோர் மறப்பதுமான மந்தணம் ஒன்றுள்ளது என்கிறார் குரு. பதஞ்சலியின் யோக சூத்திரம் அகமல்லாததை அகமென எண்ணுவதே அறியாமை என்கிறது. இது பலவகைகளில் வெளிப்படலாம்: மனநலம் பிறழலாம்; இன்பநாட்டத்தில் தீவிரம் ஏற்படலாம்;… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 47

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 46

பொருது ஜயிப்பது அஸாத்யம் ஒன்னினோடொன்னு ஒரு மதவும் பொருதாலொடுங்குவீல; பரமதவாதியிதோர்த்திடாதெ பாழே பொருது பொலிஞ்ஞிடுமென்ன புத்தி வேணம்.        (ஆத்மோபதேஶ ஶதகம் – பாடல் 46) போரிட்டு வெல்வது நடவாது ஒன்றோடொன்று பொருதி அழிக்கப்பட்ட மதமொன்றில்லை இது நினையாது பிறமதம் பழிப்போன் போரிட்டழிவான் வீணே என்றுணர வேண்டும் * மேலோட்டமாக இந்தப் பாடல் எளிய ஒன்றாகத் தோன்றலாம். ஆனால் பேராழமும் நுண்மைகளும் கொண்ட ஒன்று. மாதக் கணக்கில் இதிலேயே உழன்றாலும் பாடல் சொல்லவருவதை முழுமையாக நம்மால் கண்டடைந்துவிட முடியாது.… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 46

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 38

பலவிதமாய் அறியுன்னது அன்யயொன்னாய் விலஸுவதாம் ஸமயென்னு மேலிலோதும் நிலயெயறிஞ்ஞு நிவர்ன்னு ஸாம்யமேலும் கலயிலலிஞ்ஞு கலர்ன்னிருன்னிடேணம்       (ஆத்மோபதேஶ ஶதகம் – பாடல் 38) பலவென்றறியப்படுவது பிறிது ஒன்றென ஒளிர்வது நிகரெனப்படுவது நிலையை அறிந்து விடுதலை அடைந்தபின் நிகர்நிலையில் கரைந்து கலந்திடு * இச்சொற்களை புரிந்துகொள்வதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். பொதுவாக மலையாளத்தில் நிவர்ன்னு என்றால் ஒருவர் நேர்மையானவராதலை குறிக்கும். நடராஜ குரு அந்தப் பொருளில்தான் அதை தன் உரையில் பயன்படுத்துகிறார். ஆனால் நான் அதன் சமஸ்கிருத மூலத்தை… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 38

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 35

ஒரு பதினாயிரம் ஆதிதேயர் ஒன்னாய் வருவது போலே வரும் விவேகவிருத்தி அறிவினெ மூடும் அநித்ய மாயயாம் ஈ இருளினெ ஈர்ன்னெழும் ஆதிசூர்யன் அத்ரே (ஆத்மோபதேச சதகம் – பாடல் 35) பதினாயிரம் கதிரவர் ஒன்றாய் எழுவது போல் தோன்றும் பகுத்தறிவே அறிவை மறைக்கும் நிலையில்லா மாயையாம் இந்த இருளினைக் கிழித்தெழும் முதற்கதிரவனே * நம் ஆர்வத்தைத் தூண்டும் பொருட்களால் நிறைந்தது புற உலகு. நமது ஐம்புலன்களும் அப்பொருட்களின் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டபடியே உள்ளன. ஆனால், எந்தக் கவர்ச்சியும் நிலைத்திருப்பதில்லை.… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 35

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 25

ஒருவனு நல்லதுமந்யனல்லலும் சேர் ப்பொரு தொழிலாத்மவிரோதியோர்த்திடேணம் பரனு பரம் பரிதாபமேகிடுன்னோ ரெரி நரகாப்தியில் வீணெரிஞ்ஞிடுன்னு (ஆத்மோபதேச சதகம் – பாடல் 25) நன்மை ஒருவருக்கும் தீமை பிறருக்கும்  பயக்குமெச் செயலும் அகத்திற்கெதிரியென அறியவேண்டும் பிறர்க்குப் பெருவலி அளிப்போர் யாரும் நரகெனும் எரிகடலில் வீழ்ந்தெரிவார் திண்ணம் முந்தைய பாடலில் அனைவரின் மகிழ்ச்சிக்குமான நேர்மறை வழியைக் கூறிய நாராயண குரு இங்கே தீமையைக் கொணரும் எதிர்மறை வழியை வைத்து சமன்செய்கிறார். வரலாறு நெடுக, புனிதர்களும், மெய்யியலாளரும், மீட்பர்களும், ஆசான்களும் என… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 25

நடராஜ குருவும் நானும் – 15

சென்னையில் கிருஷ்ண வர்மா எனும் நண்பர் இருந்தார்.  கொச்சியின் அரச பரம்பரையில் வந்தவரென்றாலும் அரச குடும்பத்தவரைப் போல நடத்தப்படுவதை விரும்பாதவர்.  தன் பெயரை வர்மா கிருஷ்ணன் என மாற்றிக்கொண்டவர்.  ஏஷியா பப்ளிஷிங் ஹவுஸ் நிறுவனத்தின் பதிப்பாசிரியர்களில் ஒருவரான அவர் நடராஜ குருவின்  பகவத் கீதை உரையைப் பற்றி கேள்விப்பட்டபோது தன் நிறுவனத்தின் மூலம் அதை பதிப்பிக்க விரும்பினார்.  ஆறுமாதங்கள் கழிந்தபின்னர், கையெழுத்துப் பிரதி பம்பாய்க்கு அனுப்பப்பட்டிருப்பதாக ஜான் ஸ்பியர்ஸிடம் தெரிவித்தார். பம்பாயிலும் எதுவும் முடிவாகவில்லை என்பதால் ஏஷியா… Read More நடராஜ குருவும் நானும் – 15

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 7

விழிக்காது உறங்காது அறிவாகவே இருப்பாய்! அவ்வாறிருப்பது கைகூடாதென்றால் ப்ரணவத்தை உணர்ந்து பிறப்பொழிந்து வாழும் முனிஜன சேவையில் உன்னை நிறுத்துவாய்! (ஆத்மோபதேச சதகம் – பாடல் 7) முதல்முறை கேட்கும்போதாவது இப்பாடல் முரணுரையாகத் தோன்றும். விழிப்புநிலைக்கும் உறக்கத்திற்கும் மாறிக்கொண்டேயிருப்பதற்கான தேவையில்லாமல், அறிவுடன் ஒன்றியிரு என்று தேடுபவனை அறிவுறுத்துகிறார் குரு. பெரும்பாலான உயிரினங்களைப் போலவே மனிதனும் பகலில் விழித்திருந்து இரவில் உறங்குகிறான். நமது உறக்கம் மற்றும் விழிப்புப் பழக்கத்திற்க் காரணமான இயற்கையின் தன்னியல்பில் தலையிடும் சக்தி நமக்குள்ளதா? மும்மை அடிப்படைப்… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 7

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 6

எழவேண்டும் பின் உறங்கவேண்டும் உண்ணவேண்டும் இணையவேண்டும் என்றிவ்வண்ணம் பல அவாக்கள் எழும்போது மாறாமல் உள்ள வடிவை அறிய யாருளர்?                                                                            (ஆத்மோபதேச சதகம் – பாடல்… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 6

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 5

உலகத்தோர் உறங்குவதையும் விழிப்பதையும் எண்ணுவதையும் உற்றுநோக்கி நிற்கும் ஏற்றப்படாததும் எப்போதும் அணையாததுமான விலைமதிப்பில்லா விளக்கை கண்டறிந்து முன் செல்வோம்.                                                                       (ஆத்மோபதேச சதகம் – பாடல் 5) பிரித்தானிய தத்துவவியலாளர்… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 5

நேர்காணல் – 10

22.6.1996 நான் ஒரு கதை போல சொல்வதுண்டு.  ஒருமுறை பஞ்சாபில் இருந்து ஒரு தோட்டக்கலை நிபுணர் இங்கு வந்தார்.  மிக அபூர்வமான சில மலர்ச் செடிகளின் விதைகளை எனக்குத் தந்தார்.  அன்றே அவருடன் நான் கோவை போக வேண்டியிருந்தது.  எனவே அவற்றைத் தொட்டியில் விதைத்து நீரூற்றிவிட்டு, அப்போது தோட்டத்தை கவனித்துக் கொண்டிருந்த ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு, கோவை போனேன்.  பத்துநாள் கழித்து திரும்பி வந்தால் தொட்டிகளில் வெண்டைச் செடிகள்தான் இருந்தன.  என்ன நடந்தது என்று விசாரித்தேன்.  தோட்டக்காரர் நீரூற்றப்பட்டு… Read More நேர்காணல் – 10