மரணத்தை எதிர்கொள்ளல் – 2

நம்முடைய எந்தப் பகுதி உண்மையில் ‘நாம்’?  அது நாம் உண்ணும் உணவா, நம்முடைய எலும்புகளின் மஜ்ஜையாக மாறும் உணவு ஊட்டமா, நம் மூளையின் செல்களா, அல்லது நம்முடைய மத்திய நரம்பு மண்டலமா, அல்லது நம்முடைய தசைகளா?  நாம் யாராக இருக்கிறோம் என்பதைப் பெரிதாகக் குறைக்காமல் நம்முடைய சில பகுதிகளை நீக்கிவிட முடியும்; வேறு சில பகுதிகளை நீக்கினால் நாம் இறந்துவிடுவோம்.  இரண்டாவதாகச் சொன்னதை ‘நாம் யாராக இருக்கிறோம்’ என்பதைத் தீர்மானிக்கும் முக்கிய அம்சங்களோடு இணைத்துப் பார்க்க வேண்டும்.… Read More மரணத்தை எதிர்கொள்ளல் – 2

நேர்காணல் – 1

31.12.95 காலை பிரார்த்தனை வகுப்பு முடிந்துவிட்டது.  மாணவர்கள் பலர் கிளம்பிச் சென்றுவிட்டனர்.  நித்ய சைதன்ய யதி ஒரு மாணவரின் தோளைப் பற்றியபடி விருந்தினர்களை சந்திக்கும் பகுதிக்கு வருகிறார்.  விசாலமான கூடத்தின் ஒரு பகுதி பிரார்த்தனைக்கும், மறுபகுதி விருந்தினர்களுக்கும் ஒதுக்கப்பட்டிருந்தது.  இப்பகுதியின் ஒரு பக்க கண்ணாடிச்சுவர் வழியாக குருகுலத்தின் சிறுகட்டிடங்களும் தேயிலைச்செடிகளும் சில ஓட்டு வீடுகளும் தெரியும்.  யதி தந்த நிறத்தில் ஸ்வெட்டர் அணிந்திருக்கிறார்.  தூய வெண்ணிறத் தாடியும் தலைமயிரும் சிலுசிலுக்கின்றன.  காது கேட்பானைப் பொருத்தியபடி என்னைப் பார்த்துப்… Read More நேர்காணல் – 1

என் வாழ்க்கைக் குறிப்புகள் – 2

இரண்டாம் உலகப்போர் முடிந்ததும் பிரிட்டிஷ் அரசு தேசியத் தலைவர்களை பரோலில் விடுதலை செய்தது.  சிறையிலிருந்து வெளியே வந்த காந்தி பூனாவிலுள்ள மணிபவனம் என்ற இடத்துக்கு இயற்கை வைத்தியத்துக்காகப் போனார்.  அங்கு அவரை நான் சந்தித்துப் பேசிய அனுபவம் இது. காலை 4 மணிக்கு மணிபவனத்திற்குப் போனேன்.  காலை பிரார்த்தனைக்கு அவர் 5 மணிக்கு அங்கு வருவார் என்று எனக்குத் தெரியும்.  அவருக்கு மிக நெருக்கத்தில் உட்காரும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.  வழக்கமான ‘ஶ்ரீராம் ஜெய்ராம், ஜெய்ராம்’க்குப் பிறகு… Read More என் வாழ்க்கைக் குறிப்புகள் – 2

நடராஜ குருவும் நானும் – 2

நடராஜ குரு ஒரு வருடம் ஐரோப்பாவிலும், ஒரு வருடம் அமெரிக்காவிலும் இருந்து விட்டுத் திரும்பிய போது எல்லா இடங்களிலும் அவருக்கு ஒரு ‘ஹீரோ’வைப்போன்ற பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.  மைசூரில் வளர்ந்தவராதலால் அவரால் சரளமாக மலையாளத்தில் பேசமுடியாது.  எனவே,அவரது உரைகளை மலையாளத்தில் மொழிபெயர்ப்பதற்காக அவருடன் நான் செல்ல வேண்டும் என அவர் விரும்பினார்.  மகான்களை தூரத்திலிருந்து மட்டுமே வழிபட முடியும் என்பதை நான் விரைவில் உணர்ந்தேன்.  1946-இல் காந்தியின் ஆசிரமத்தில் தங்கியிருந்தபோது ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் ஏற்கனவே எனக்கு… Read More நடராஜ குருவும் நானும் – 2