பொருள் (அர்த்தம்)

ௐ எனும் ப்ரணவத்தில் உச்சரிக்கப்படும் ஒலிகள் ‘அ, உ, ம்’ என்பவை மட்டுமே. நான்காவதாக வரும் தீர்க்கமான மெளனம் ஒலிக்கப்படும் எழுத்துக்களிலிருந்து விலகி நிற்கின்றது. அதுபோலவே வாழ்நோக்கங்களில் (புருஷார்த்தங்கள்) அறம் (தர்மம்), பொருள் (அர்த்தம்), இன்பம் (காமம்) ஆகிய மூன்றும் ஒன்றாய் நிற்பவை. வீடுபேறு (மோட்சம்) தனியாய் நிற்கும். இருப்பு, நனவு, இனிமை (அஸ்தி-பாதி-ப்ரியம்) என்பவை முறையே அறம் பொருள் இன்பத்தை சுட்டுகின்றன.  எல்லாவற்றிலும் உயர்ந்தது வீடுபேறுதான் (மோட்சம்). இவற்றிலெல்லாம் அடங்கியிருக்கும் ஒரு ரகசியமுண்டு. அதைக் கண்டுகொண்டோமென்றால்,… Read More பொருள் (அர்த்தம்)

இந்திய இலக்கிய மரபில் தொல்படிமங்கள்

வரலாற்றின் தொடக்கம் முதல் கதை, கவிதை, இலக்கியங்கள் உள்ளன.  மத்திய தரைக்கடல் நாடுகளான சுமேரியா, பைசான்டியா போன்றவற்றிலும் மேலும் மேற்குப் பக்கமாக நகர்கையில் ஸ்லாவிக், ஜெர்மன் நாடுகளிலும் அதிபுராதன இலக்கியப் படைப்புகள் உண்டு.  ஆனால் இந்தியாவில் கிறிஸ்துவுக்கு முன்பு எழுதப்பட்ட சரியான இலக்கியப் படைப்புகள் எவையும் நமக்கு இதுவரை கிடைக்கப் பெறவில்லை.  காலத்தால் மிகப் புராதனமான ரிக், யஜுர் வேதங்களும் பிறவும் இலக்கியங்களல்ல.  புராதன வாழ்வின் அடிப்படைகளாக அமைந்த தோத்திரங்கள், வழிபாட்டு முறைகளைப் பற்றிய விதிகள், சடங்குகளைப்… Read More இந்திய இலக்கிய மரபில் தொல்படிமங்கள்

நேர்காணல் – 10

22.6.1996 நான் ஒரு கதை போல சொல்வதுண்டு.  ஒருமுறை பஞ்சாபில் இருந்து ஒரு தோட்டக்கலை நிபுணர் இங்கு வந்தார்.  மிக அபூர்வமான சில மலர்ச் செடிகளின் விதைகளை எனக்குத் தந்தார்.  அன்றே அவருடன் நான் கோவை போக வேண்டியிருந்தது.  எனவே அவற்றைத் தொட்டியில் விதைத்து நீரூற்றிவிட்டு, அப்போது தோட்டத்தை கவனித்துக் கொண்டிருந்த ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு, கோவை போனேன்.  பத்துநாள் கழித்து திரும்பி வந்தால் தொட்டிகளில் வெண்டைச் செடிகள்தான் இருந்தன.  என்ன நடந்தது என்று விசாரித்தேன்.  தோட்டக்காரர் நீரூற்றப்பட்டு… Read More நேர்காணல் – 10