ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 12

தோலுமெலும்பும் மலமும் துன்பம்தரும் நாற்றங்களுமேந்தும் அகந்தையை காண்க அழியும் இதுவேறு அழிந்து முழுமையாகும் பெருமகந்தை வந்திடா வரம் அருள்க                                                              ஆத்மோபதேச சதகம் – பாடல் 12 முந்தைய பாடல்களில், அடுத்தடுத்து வைக்கப்பட்ட இரு பண்புக்கூறுகளை விவரித்தோம்.  ஒன்று நோக்கிநிற்கும் அகம்.  மற்றொன்று உடற்செயல்பாடுகளிலும் பல்வேறு மனமாற்றங்களிலும் சிக்கிகொண்டுள்ள நனவு.  ஒருவன் தன் மெய்மையை கண்டெடுக்க முயலுகையில் அவன் தனது மெய்சார் அடையாளத்திலோ ஆன்மீக அடையாளத்திலோ சிக்கிக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.  பெரும்பாலும் ‘நான்’ எனும் எண்ணம் வரும்போது… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 12

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 11

நான் நான் என்றுரைப்பதெல்லாம் ஆராய்கையில்அகமேயன்றி பலவல்ல ஒன்றேயாகும் அகலும் அகந்தை அனேகம் ஆகையால் அனைத்திலும் அகத்தின் பொருள் தொடர்ந்திடும்                         (ஆத்மோபதேச சதகம் – பாடல் 11) நான்காவது பாடலில் சொல்லப்பட்ட தூய அறிவின் சித்திரம் நம் முன்னே உள்ளது.  ஐந்தாவது பாடலில் அத்தூய அறிவு நிலையில் நம்மை பொருத்திப்பார்த்துக்கொள்வது எளிதல்ல என்றார் குரு. அதற்குக் காரணம் உறங்குபவன், விழித்திருப்பவன், வேட்கைகள் உடையவன் அவற்றை வளர்த்தெடுப்பவன் என மீண்டும் மீண்டும் நிகழும் அடையாளப்படுத்தலே என்றார்.  உடலைப் பேணுதல்… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 11

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 10

இருளில் இருப்பவனே யார் நீ? என்றொருவன் கேட்க – நீயும் அவனிடம் ‘நீ யார்? என்கிறாய் இரண்டிற்கும் விடை ஒன்றே!                     (ஆத்மோபதேச சதகம் – பாடல் 10) கண்களை மூடிக்கொண்டு உங்கள் இருப்பை அகத்திலிருந்து நோக்க முயல்வீர்களேயானால் உங்கள் உடலின் எல்லை உண்மையில் எங்கு முடிகிறது  என்பதை அறிவது எளிதல்ல. இங்குமங்குமாக சில மங்கலான உணர்வுகள் தோன்றலாம்.  ஆனால் கண்களை மூடியபடி உங்கள் மண்டையோட்டின்… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 10

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 8

ஒளிமுதலாய பழமைந்தும் உண்டு நாறும் குழலில் புகுந்து மாறிமாறியாடும் கிளிகளைந்தையும் வீழ்த்தி வெளியுருவையேந்தி அகம் விளங்கிடவேண்டும் (ஆத்மோபதேச சதகம் – பாடல் 8) ஆத்மோபதேச சதகத்திற்கு அறிமுகம் போல் அமைந்துள்ள முதல் பத்து பாடல்களில் எட்டாவது மிகவும் முக்கியமானது. இதில், நிமித்தவியல் (teleological) இலக்குடன் ஓர் இருத்தலியல் (ontological) மதிப்பீடு செய்யப்படுகிறது. அழகியலும் அறவியலும் மெய்விளக்கவியலுடன் இணைகின்றன. அத்துடன், நூலின் ஒட்டுமொத்த அமைப்புக்கும் மாதிரியாக விளங்குகிறது இப்பாடல். மனிதன் அடையும் இன்பதுன்பங்களின் ரகசியத்தை விளக்கும் உள உணர்ச்சியின்… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 8

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 7

விழிக்காது உறங்காது அறிவாகவே இருப்பாய்! அவ்வாறிருப்பது கைகூடாதென்றால் ப்ரணவத்தை உணர்ந்து பிறப்பொழிந்து வாழும் முனிஜன சேவையில் உன்னை நிறுத்துவாய்! (ஆத்மோபதேச சதகம் – பாடல் 7) முதல்முறை கேட்கும்போதாவது இப்பாடல் முரணுரையாகத் தோன்றும். விழிப்புநிலைக்கும் உறக்கத்திற்கும் மாறிக்கொண்டேயிருப்பதற்கான தேவையில்லாமல், அறிவுடன் ஒன்றியிரு என்று தேடுபவனை அறிவுறுத்துகிறார் குரு. பெரும்பாலான உயிரினங்களைப் போலவே மனிதனும் பகலில் விழித்திருந்து இரவில் உறங்குகிறான். நமது உறக்கம் மற்றும் விழிப்புப் பழக்கத்திற்க் காரணமான இயற்கையின் தன்னியல்பில் தலையிடும் சக்தி நமக்குள்ளதா? மும்மை அடிப்படைப்… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 7

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 6

எழவேண்டும் பின் உறங்கவேண்டும் உண்ணவேண்டும் இணையவேண்டும் என்றிவ்வண்ணம் பல அவாக்கள் எழும்போது மாறாமல் உள்ள வடிவை அறிய யாருளர்?                                                                            (ஆத்மோபதேச சதகம் – பாடல்… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 6

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 5

உலகத்தோர் உறங்குவதையும் விழிப்பதையும் எண்ணுவதையும் உற்றுநோக்கி நிற்கும் ஏற்றப்படாததும் எப்போதும் அணையாததுமான விலைமதிப்பில்லா விளக்கை கண்டறிந்து முன் செல்வோம்.                                                                       (ஆத்மோபதேச சதகம் – பாடல் 5) பிரித்தானிய தத்துவவியலாளர்… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 5

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 4

அறிவும் அறிந்திடும் பொருளும் அறிபவன் தன்னறிவும் எல்லாம் முழுமுதல் மட்டுமேயாம் மயக்கம் நீங்கி விளங்கிடும் உயர்வாம் அறிவிலமர்ந்து அதுமட்டுமாதல் வேண்டும்                                                                          (ஆத்மோபதேச சதகம் – பாடல்… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 4

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 3

புறத்தில் இருப்பதும் அகம் உணர்வதுமான வெளி முதலான பூதங்களைந்தும் ஆழிச்செல்வத்தில் எழும் அலைகள் போல தம்மில் பேதமின்றித் தோன்றிடல் வேண்டும்                                                                                  [ஆத்மோபதேச சதகம்… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 3

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 2

ஆன்மாவும் புலன்களும் உடலும் தொட்டறியும் பல்லுலகும் எல்லாம் எண்ணுங்காலை பரவெளியில் உயர்ந்தொளிரும் கதிரவனின் திருவுருவென்று தேடலினால் தெளிந்திடுவோம்.                                                                                    … Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 2