ஶ்ரீசக்ர தியானம் – 21
கம் க*ம் கம் க*ம் ஙம் அனங்ககுஸுமா காமேஶ்வரீ மஹாத்ரிபுரஸுந்தரீ முப்புரங்களை எழிலூட்டும் அன்னையே, நனவுவெளி (சிதாகாஶம்) ஒளியூட்டப்படாதிருக்கையில் அதை உன் ஒளிகொண்டு நிரப்புகிறாய். அதன்பின் அங்கே மின்னல்கீற்ற்றுகளென விடாது மின்னிக்கொண்டிருக்கிறாய். உனது அந்த ஒளிர்வில் பகலவனின் ஒளியை, திங்களின் ஒளியை, தீயின் ஒளியை மாறிமாறிக் காண்கிறேன். சூரியனின் ஒளி எனது நனவு வாயிலில் நுழைகையில் என்னுள்ளிருக்கும் அறிபவன் விழித்தெழுகிறான். அப்போது உடன்பிறந்தோர் மீதான பாசம் என்னில் தோன்றுகிறது. புலனறிவுகொண்ட ஒவ்வொரு உயிரையும் என் உடன்பிறந்தவையெனக் காண்கிறேன்.… Read More ஶ்ரீசக்ர தியானம் – 21