ஶ்ரீசக்ர தியானம் – 6
ஐம் நாமாகர்ஷிணீ நில்லா நீங்கா ஒலியின் இறைவியே! சிவனது வில்லே உன் இயக்கமாய் இருக்கிறது. சொற்களை எண்ணியெடுத்து அம்புகளெனத் தொடுத்து என் நாவில் செலுத்துகிறாய். அம்பு உடலை காயப்படுத்துவது. ஆனால், உனது அம்புகள் அழிவின்மை எனும் அமுதை என் நெஞ்சில் செலுத்துகின்றன. என்னை பேரின்பத்தில் ஆழ்த்துகின்றன. அன்பே உருவான தாயே, ஒவ்வொரு சொல்லும் உன் பெருமையைப் பாடும் பாடலாய் அமைகிறது. வசந்தத்தில் மலரும் பூப்போல, அதன் நறுமணம் என் மூச்சுக்காற்றை நிறைக்கிறது. என் பார்வைக்கு இனியதாய் இருக்கிறது.… Read More ஶ்ரீசக்ர தியானம் – 6