ஶ்ரீசக்ர தியானம் – 16
ஆம் புத்த்*யாகர்ஷிணீ படைப்பூக்கத்தைத் தூண்டும் இறைவியே! நுண்ணிய உணர்திறன் கொண்ட கவிஞரும் ஓவியரும் பகலில் கதிரவனின் பொற்கிரணங்களால் மெல்ல தூண்டப்படுகையில் அழகிய மலைகளையும் அல்லிமலர்கள் நிரம்பிய நீர்நிலைகளையும் கண்டு மனஎழுச்சி கொள்கின்றனர். வாழ்வுண்மைகள் எல்லாம் அழகின் ஆகச்சிறந்த அடையாளங்களை குறிப்புணர்த்தும் கருவிகளாக மாறுகின்றன. தாமரைப் பொய்கையில் பிறந்தவனைப் போல, ஒவ்வொரு காலையிலும் விழித்தெழுகையில் உன் காலடியில் அமர்ந்து ஞானமளிக்கும் உன் சொற்களை கேட்கவேண்டும் என்ற உறுதிப்பாடோடுதான் எழுகிறேன். உனது அருஞ்சொற்கள் அறிவொளியற்ற கானகத்தில் விழுந்து வீணாகிவிடக்கூடாது என்பதில்… Read More ஶ்ரீசக்ர தியானம் – 16