ஶ்ரீசக்ர தியானம் – 4

ஔம் ஆத்மாகர்ஷிணீ பேரறிவானவளே, அன்னையே! உன் இருப்பு அனைத்தையும் ஒளிரச் செய்கிறது. என் அறியாமை எனும் தடையை மீறி எங்கும் பரவியிருக்கும் உன் ஞானத்தின் ஒரு பகுதியாகும் தகுதி எனக்குண்டாகட்டும். பேரிறையான சிவனின் முடிவிலா அமைதியும் பிரபஞ்சத்தைப் படைக்கும் இடையறா இயக்கமுமே உன் இணையடிகள். இறைவனின் விண் நெருப்பை என் மனமாய், என் மதியாய், தன்முனைப்பாய் என்னில் எரியச் செய்கிறாய். உயிரமுது பாயும் உடலின் திண்மையை, என் ஆன்ம வேட்கையெனும் தீக்கொழுந்தை உன் கொடையாக அருளியிருக்கிறாய். வாழ்வெனும்… Read More ஶ்ரீசக்ர தியானம் – 4

ஶ்ரீசக்ர தியானம் – 3

ம் அம்ருதாகர்ஷிணி என்றும் வாழும் அன்னையே! நிலைபேறென்னும் அமிழ்தத்தை எப்போதும் பொழிந்துகொண்டிருப்பவளே! மாறிக்கொண்டே இருக்கும் ஒழுக்கான இவ்வுலகில் ஒரு சிறு மினுக்கமென வந்து பிறக்கும்படி என்னை விதித்தாய். எங்கிருந்து வருகிறேன் நான்? எதில் சென்று மறைகிறேன்? நானறியேன். என் தற்காலிக உறைவிடமென சிதைவுறும் இவ்வுடலை அளித்திருக்கிறாய். இங்குள்ள வாழ்வு நிலையில்லாததுதான் என்றாலும், நீ மாற்றமில்லாதவள் என்பதற்கும் உன் வியத்தகு நாடகத்தில் ஒரு தொடர்ச்சி உள்ளது என்பதற்கும் சான்றுகள் உள்ளன. ஆற்றுப்படுத்தப்படாத புலன்களும் நெறிப்படுத்தப்படாத மனமும் கொண்டவன் நான்.… Read More ஶ்ரீசக்ர தியானம் – 3

ஶ்ரீசக்ர தியானம் – 2

முப்புரங்களையும் எழிலூட்டுபவளே! உயிர் ஒவ்வொன்றிற்கும் உடலொன்றை அளித்து இவ்வுலகைப் படைத்து ஒவ்வொன்றையும் காப்பவள் நீ. என்றென்றைக்கும் நன்றியோடு உன்னை பணிகிறேன். உன் கருணை மகத்தானது. சிவ-சக்தி இணைவின் மையமான பிந்துவில் வெறும் இயல்கைகளாக இருந்த விந்துவும் கருமுட்டையும் உன் கவர்ச்சியின் ஆற்றலால் தேர்ந்தெடுக்கப்பட்டு தொழிற்படுத்தப்படுகின்றன. புலனுறுப்புகளும், செயலுறுப்புகளும், அக உறுப்பின் நான்குநிலைகளிலான இயக்க ஒழுங்கமைவும் கொண்ட உடலுடன் கூடிய உயிராக வளரும் நல்லூழை ஒரு உயிரணுவுக்கு அளித்தாய். இந்த ஒற்றை உயிரணுவைக் கொண்ட உடல், உன் விருப்பப்படி,… Read More ஶ்ரீசக்ர தியானம் – 2

ஶ்ரீசக்ர தியானம் – 1

அம் காமாகர்ஷிணீ படைக்கும் தொழிலை பேரன்புடன் நிகழ்த்துபவளே! அன்னையே,  ஒத்திசைவு விதியென தன்னை வெளிப்படுத்திக்கொள்வதும், பரமேஶ்வரன் எனப்படுவதுமான முழுமுதலுக்கும் தொடர்ந்து எய்தப்பெறும் நலன்களுக்கும் இடையிலான பிணைப்பை உன்னில் நான் காண்கிறேன்.  நலன்கள் ஒவ்வொன்றும் உன் மனம் மயக்கும் தொடுகையால் அருளப்படுகின்றன. உன் தொடுகை கழி நிகழ் எதிர்வென்னும் முக்காலங்களையும் எழில்பெறச் செய்கிறது. மாறிக்கொண்டே இருக்கும் உருவங்களை உயிர்ப்பூட்டும் மீ ஆன்மாவே, பேரொளியே, உன் தாமரையடிகளுக்கு என் வணக்கம். நான் அப்பாவிதான், அறிவிலிதான் என்றாலும் பேரிறை மேல் நீ… Read More ஶ்ரீசக்ர தியானம் – 1