ஶ்ரீசக்ர தியானம் – 14

ஈம் ஶப்தாகர்ஷிணீ அன்னையே, அறிவொளிச் சொல்லையும் உவகைதரும் இன்னிசையையும் ஒழுகியோடச் செய்து, வடிவற்றதிலிருந்து ஒளிரும் வண்ண உருவரைகளையும் ஐயத்துக்கிடமற்ற பொருள்களையும் உண்டாக்குகிறாய். மூலாதாரம் எனும் என் அடித்தளத்தில் புலனறிவு கொண்ட உயிர்கள் எல்லாமே என் உடன்பிறந்தவை. என் மனதிற்கினியவை. மௌனமே ஊடகமென ஒரு மொழியை நீ எனக்களித்திருக்கிறாய். என் புலனுணர் அமைப்புடன் உறவாடி அது எனது இன்பதுன்பங்களை வெளிப்படுத்துகிறது. நீ எனக்கருளியுள்ள குறியீட்டு மொழி ஆற்றல்மிகு தொடர்புமொழியாக எளிதில் புரிந்துகொள்ளப்படுகிறது. உருவக மொழியை எனக்களித்திருக்கிறாய் நீ. ஒரு… Read More ஶ்ரீசக்ர தியானம் – 14

ஶ்ரீசக்ர தியானம் – 13

உம் ஸ்பர்ஶாகர்ஷிணீ வாழ்வளிக்கும் அன்னையே, உன் அதிர்வுகொண்ட குரலெனும் விரிந்த பரப்பில் அகவெளி என்றும் அண்டவெளி என்றும் பகுப்பேதும் இல்லை. அறிவெல்லை கடந்த உன் ஒளி உள்ளுறை ஆற்றலென இறங்கி இவ் இயலுலகில் உள்ளவற்றை எல்லாம் உயிர்ப்பு கொள்ளச் செய்கிறது. உடலின் சுவாசக் கருவி மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுகையில் உடல் ஆற்றல் பெற்று தன் செயல்களையெல்லாம் ஆற்றுகிறது. அதுபோலவே, இம் முழு உலகுக்கெனவும் நீ சுவாசிக்கிறாய். உண்மையில் அங்கு ஒரு ஆளென நீ இல்லை. எமது நாடிகளிலும்… Read More ஶ்ரீசக்ர தியானம் – 13

ஶ்ரீசக்ர தியானம் – 12

ஊம் ரூபாகர்ஷிணீ மூவுலகையும் எழிலூட்டும் அன்னையே, காலைநேரப் பகலவன் ஒளியூட்டும் பனித்துளிகள் எண்ணற்றவை. நண்பகலில் அதே சூரியன் விடிகாலையில் தோன்றிய உலகிலிருந்து மிகவும் வேறுபட்ட உலகொன்றை காட்டுகிறான். ஞாயிறு மறைவதற்கென வானம் மீண்டும் செந்நிறம் பூசப்படுகிறது. நிலவு உலகின் அழகுக்கு வேரொரு பரிமாணம் அளிக்கிறது. சின்னஞ்சிறியனவாய் தோன்றினாலும் எண்ணற்ற விண்மீன்களால் நிரம்பிய வானம் ஈடிணையற்றதாக இருக்கிறது. இப்படி பலவண்ணக் கருக்களைக் கொண்டது உன் எழில். பலதரப்பட்டவை என்றாலும் அவற்றில் உள்ன அழகு ஒன்றேதான் – பல ஆடிகளில்… Read More ஶ்ரீசக்ர தியானம் – 12

ஶ்ரீசக்ர தியானம் – 11

ரும் ரஸாகர்ஷிணீ அன்னையே, அனைத்திலும் நீ களிப்படைகிறாய். அனைத்துயிர்களின் களிப்பெனவே திகழ்கிறாய் நீ. மையப் புள்ளியிலிருந்து மெய்நகர்வின்றி மாயமான முறையில் நகர்கிறாய். அதன் வழியே கோடுகளையும் முக்கோணங்களையும் வட்டங்களையும் ஏற்படுத்துகிறாய். எளியதும் சிக்கலானதுமான அனைத்து வடிவத் தோற்றங்களையும் உண்டாக்குகிறாய். உனது எண்ணற்ற மண்டலங்களே இந்தப் பேரண்டமெனத் திகழ்கின்றன. எனது மொழி கொண்டு நான் உன்னை போற்றுகையில் நான்கு சிவதத்துவங்களின், ஐந்து சக்திதத்துவங்களின் சாரமெனவே உன்னை காண்கிறேன்.  அன்னையின் மடியிலிருக்கையில் குழந்தை மெய்மறந்து கிடக்கிறது. அந்த மகிழ்வு அச்சமின்மையில்… Read More ஶ்ரீசக்ர தியானம் – 11

ஶ்ரீசக்ர தியானம் – 10

ரூம் கந்தா*கர்ஷிணீ என்றும் மகிழ்ந்திருக்கும் அன்னையே, அனைத்து உதடுகளிலும் புன்னகையாக இருப்பது நீயே. எல்லா இதயங்களிலும் சிலிர்ப்பென விளங்குவது நீ. முகிழ்த்து உதிர்ந்த பிரபஞ்ச சுழற்சிகள் அனைத்தின் அழிவற்ற சாரமும் அவற்றின் நடைமுறை, கனவு, ஆழுறக்கம், (அறிவெல்லை) கடந்த நிலை என்ற நால்வேதங்களில் உள்ளது. இந்த நான்கு மறைகளிலிருந்து உன் படைப்புக்கான கருத்துகளை எடுத்துக்கொள்கிறாய். அது பல்வண்ணக் காட்சிக் கருவி போல (kaleidoscope) புத்தம் புது வடிவில், தனிச்சிறப்பான வண்ணக்கலவையாக, ஆழ்படிமங்களுக்கு புதிய அர்த்தங்கள் தருவதாக இருக்கிறது.… Read More ஶ்ரீசக்ர தியானம் – 10

ஶ்ரீசக்ர தியானம் – 9

ல்ரும் சித்தாகர்ஷிணீ கண்டுமகிழ கண்களிரண்டையும், முகர்வதற்கு மூக்கையும், ஒவ்வொரு நாளும் மாயமென எம் முன் இலையில் வந்தமரும் அறுசுவை உணவை ருசிக்க வாயொன்றையும் எமக்களித்திருக்கிறாய். எம் அகத்தில் பொங்கும் அன்பை எப்படி பிறரிடம் செலுத்த முடிகிறதோ அதேபோல் பிற உயிர்கள் எம்மிடம் காட்டும் அன்பையும் எளிதில் ஏற்கும் இதயங்களை எமக்கு கொடுத்திருக்கிறாய். உனது தேன் எம் நாவில் திகழ்கிறது. நாங்கள் சொல்லெடுக்கையில் உன் அன்பின் இனிமை பொழிகிறது. எம் இதயத்தின் மையத்தில் அமர்ந்தபடி எம் வாழ்வை நடத்திச்… Read More ஶ்ரீசக்ர தியானம் – 9

ஶ்ரீசக்ர தியானம் – 8

ல்ரீம் தை*ர்யாகர்ஷிணீ தாயே, வலிமையும் வீரமும் நிறைந்த சிங்கத்தின் மீது ஊர்பவள் நீ. சிவன் எனும் வடிவான இருக்கையில் அமர்ந்திருக்கிறாய். பரமேச்வரனின் மடி உன் அரியணை. அரசியருக்கெல்லாம் பேரரசி நீ. உன் சிறுவிரல் பற்றி உன்னைத் தொடரும் என்னை அச்சம் என்பது நெருங்குமோ? விண்வெளியில் ஒளிரும் பகலவன் மண்ணின் மீது திகழும் ஒவ்வொரு உயிரினமும் இயங்கும்படி சூரிய ஆற்றலை பொழிகிறான். ஓம் எனும் மந்திரத்தின் வடிவெடுத்தவள் நீ. உன் ஒளியைக் கொண்டு நாங்களும் ஒளிர்கிறோம். உன் ஞானமெனும்… Read More ஶ்ரீசக்ர தியானம் – 8

ஶ்ரீசக்ர தியானம் – 7

எம் ஸ்ம்ருத்யாகர்ஷிணீ தாயே! தூய நனவின் தெளிவு நீ. பிரபஞ்ச நினைவின் காந்தப் புலம் நீ. பகலிலும் இரவிலும் செய்ய வேண்டியவற்றை நிரை மாறாமல் நினைவில் வைத்திருக்கும் இல்லாளைப் போல நீ பரிவுகாட்டுகிறாய். ஒவ்வொருவரும் உன் குழந்தையென, ஒவ்வொரு வீடும் உன் இல்லமெனக் கருதி முழு உலகையும் ஒன்றேபோல் புரக்கிறாய். எதிர்வரும் காலத்தில் நின்றபடி, நினைவுத் தளிர்களை நிகழ்காலத்திற்கு அனுப்புகிறாய். இவ்வாறாக, ஒரே சமயத்தில் கடந்தகாலத்தை அணிசெய்து, நிகழ்காலத்தை எழில்பெறச் செய்து, துடிப்புடன் மலரும் எதிர்காலமாக இருக்கிறாய்.… Read More ஶ்ரீசக்ர தியானம் – 7

ஶ்ரீசக்ர தியானம் – 6

ஐம் நாமாகர்ஷிணீ நில்லா நீங்கா ஒலியின் இறைவியே! சிவனது வில்லே உன் இயக்கமாய் இருக்கிறது. சொற்களை எண்ணியெடுத்து அம்புகளெனத் தொடுத்து என் நாவில் செலுத்துகிறாய். அம்பு உடலை காயப்படுத்துவது. ஆனால், உனது அம்புகள் அழிவின்மை எனும் அமுதை என் நெஞ்சில் செலுத்துகின்றன. என்னை பேரின்பத்தில் ஆழ்த்துகின்றன. அன்பே உருவான தாயே, ஒவ்வொரு சொல்லும் உன் பெருமையைப் பாடும் பாடலாய் அமைகிறது. வசந்தத்தில் மலரும் பூப்போல, அதன் நறுமணம் என் மூச்சுக்காற்றை நிறைக்கிறது. என் பார்வைக்கு இனியதாய் இருக்கிறது.… Read More ஶ்ரீசக்ர தியானம் – 6

ஶ்ரீசக்ர தியானம் – 5

ஓம் பீஜாகர்ஷிணீ இப்பேரண்டத்தின் முதல் விதை நீ. பிரபஞ்சக் கருவறையான உன்னிலிருந்தே அனைத்தும் தோன்றுகின்றன. உன்னிலிருந்ந்து தோன்றாத விளைவென்று ஒன்றுமில்லை. அவையனைத்தும் சிறிதும் சிதைவில்லாமல் உன்னில் மீளக் கலக்கின்றன. அன்னையே, எண்ணற்ற உருக்களின் விதையாக என்னை சுருக்கி எத்தனை கருவறைகளில் விதைத்தாய்! புத்தம் புது மலரென எத்தனையெத்தனை அன்னையரிலிருந்து என்னை பிறக்க வைத்தாய்! உன் ஆணைப்படி பிரம்மனும், மாலும், ஈசனும் இடையறாது படைத்தல், காத்தல், அழித்தலெனும் முத்தொழிலை புரிந்துகொண்டிருக்கின்றனர். கழிநிகழ்எதிர்வெனும் முக்காலத்திற்கும் இறையான விஷ்ணுவையே அரைக்கணத்தில் மயக்குறு… Read More ஶ்ரீசக்ர தியானம் – 5