ஶ்ரீசக்ர தியானம் – 44

னம் ஸர்வது:க*விமோசனீ எமக்கு உறுதிப்பாடளிப்பதில் மகிழும் அன்னையே! முழுமுதல் என்பது புதிர்களாலும் முரண்களாலும் நிரம்பியிருப்பதாகத் தோன்றுகிறது. நீயும் உன் இறைவனும் உனது லாஸ்ய நாட்டியத்தையும் அவனது அழிவாடலான தாண்டவ நடனத்தையும் ஆடுவதற்கென இங்கு-இப்போது எனும் ஒளிவட்டம் பாய்ச்சப்படும் எல்லையிலா கால-இடத்தை தேர்ந்தெடுத்துள்ளீர்கள். உனது படைப்பின் விரிவு எல்லையற்றது; எமது பார்வையோ குறுகியது. தொடுவானத்தின் எல்லைக்கப்பால், நீலவான் கூரை மறைத்திருக்கும் எதையும் எம்மால் காண முடிவதில்லை.  நிகழ்காலம் என்பது ஒருபோதும் கண்ணிமைப்பை விட நீண்டதல்ல. கடந்துசெல்லும் ஒவ்வொரு கணமும்… Read More ஶ்ரீசக்ர தியானம் – 44

ஶ்ரீசக்ர தியானம் – 43

த*ம் ஸர்வகாமப்ரதா ஆடலில் திளைக்கும் அன்னையே, உன் லீலையில் நீ மகிழ்கிறாய். இருளை இத்துணை ஈர்ப்புடையதாக நீ ஏன் படைத்துள்ளாய் என்பதை யாமறியோம். இரவின் இருள்திரையில் உலகு மூடப்படுகையில் மினுங்கும் மீன்களைக் கொணர்ந்து இருளின் மாறுபாட்டை மேலும் கவர்ச்சிகரமானதாக்குகிறாய். எம்மை நீ உறங்கவைக்கையில், பகலின் பெருமையை, குருமார்களின் காலடியில் அமர்ந்து நாங்கள் தேடும் ஞானத்தின் மெய்மையை மறந்துபோகிறோம். எங்கும் நிறைந்திருக்கும் உனது கரிய புரிகுழல்கள் எம்மை மேலும் மேலும் ஆழுறக்க நிலைக்கு கொண்டுசெல்கின்றன. அப்போது கனவுகளில் திளைப்பது… Read More ஶ்ரீசக்ர தியானம் – 43

ஶ்ரீசக்ர தியானம் – 42

தம் ஸர்வமங்கலகாரிணீ நன்மையை அருள்பவளே, அன்னையே! உனது கட்டளைப்படி ஒன்று பலவாகி, ஒவ்வொன்றிற்கும் பொருத்தமான ஒரு இயக்கம் விதிக்கப்படுகிறது. ஆதித்யன் எனப் பெயர் கொண்ட சூரியன் ஒருவனே. என்றபோதும் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பெயரால் அவன் அழைக்கப்படுகிறான். அவன் கொணரும் நன்மை ஒவ்வொரு மாதமும் வேறுபடுகிறது. மேஷம் உலகில் நிகழ்பவை அனைத்தையும் தொடங்கி வைக்கிறது. ஞாயிறு அதன் தொடக்கத்தில் விஸ்வகர்மன் எனும் உலகச் சிற்பியாக எண்ணப்படுகிறான். அனைத்து திசைகளையும் நோக்கும் ரவி படைப்புச் செயலுக்கென படிநிலைகளிலான ஒரு… Read More ஶ்ரீசக்ர தியானம் – 42

ஶ்ரீசக்ர தியானம் – 41

த*ம் ஸர்வப்ரியங்கரீ கருணைவடிவானவளே, அன்னையே, உனது செல்வம் எங்கும் நிறைந்துள்ளது. மூன்றரைச் சுருள்கள் கொண்ட நாகமென மூலாதாரத்தில் ஒளிந்துள்ளவளாக நீ வர்ணிக்கப்படுகிறாய். முதுகெலும்பின் நுனியிலிருந்து தலைப்பகுதியிலுள்ள ஆயிரமிதழ்த் தாமரை வரை செல்லும் செங்குத்து அளபுருவில் (vertical parameter)  இடா, பிங்கலை, சுஷும்னம் என்ற மூன்று ஆற்றல்பாதைகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. இருதயத்திற்குக் கீழே, மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம் என்ற மூன்று ஒருங்கிணைவுச் செயல்பாட்டு மையங்கள் (synergic centers) உள்ளன. இங்குதான் அனைத்து நனவிலிச் செயல்பாடுகளும் உயிரியல் சார்ந்தவற்றை உளவியல்… Read More ஶ்ரீசக்ர தியானம் – 41

ஶ்ரீசக்ர தியானம் – 40

தம் ஸர்வஸம்பத்ப்ரதா ஆன்ம தீக்கை அளிப்பவளே, அன்னையே, நீ உன் இறைவனோடு இணைகையில் ஆழி தன்னை உயர்த்திக்கொண்டு ஆதவனிடம் செல்கிறதா அல்லது பகலவன் கடல் மீது ஒளிர்கின்றானா? சிறிய நீர்த்துளி சூரியனைக் கண்டதும் சிறகு முளைத்து நீராவியென வளிமண்டலத்தில் ஏறும் பிரபஞ்ச முக்கியத்துவம் வாய்ந்த சின்னஞ்சிறு நிகழ்வை யார் கவனிக்கிறார்கள்? ஒரு துளியின் மேலேற்றம் மழைமேகம் உருவாவதை தொடங்கி வைக்கிறது. கணம் கணமென, ஒவ்வொரு நாளும் கீழ்நோக்கிப் பொழியும் சூரியனின் கருணை, ஆழியை மேலெழும் மேகமாக உருமாற்றிக்கொண்டிருக்கிறது.… Read More ஶ்ரீசக்ர தியானம் – 40

ஶ்ரீசக்ர தியானம் – 39

ணம் ஸர்வஸித்தி*ப்ரதா இவ்வுலகின் பேரன்னையே! எமது உலகு எத்தனையோ ஆயிரமாண்டுகளாக கொழுந்துவிட்டெரிந்துகொண்டிருந்த ஒரு தீப்பந்தென இருந்திருக்க வேண்டும் என அறிகிறோம். எமது சகோதரக் கோள்கள் கூட, சூரிய விபத்திற்குப் (solar catastrophe) பிறகு அதேபோல் இருந்திருக்கக் கூடும். சூல்மேகங்கள் உருவாகி நீர்பொழிந்து ஒவ்வொன்றையும் குளிர்வித்து தற்போதைய நிலையை எய்த, சூரியனின் இந்தக் கங்குகள் எத்தனை ஆயிரமாண்டுகள் பொறுத்திருந்திருக்க வேண்டும்! இவ்வுலகை குளிரச் செய்தது மட்டுமன்றி இதில் உயிரினங்களும் தோன்றி வாழும்படி செய்திருக்கிறாய். இயற்கை கலையை நகலெடுப்பதாகத் தோன்றுகிறது!… Read More ஶ்ரீசக்ர தியானம் – 39

ஶ்ரீசக்ர தியானம் – 38

ட*ம் ஸர்வத்வந்த்வக்ஷயங்கரீ முழுமையை இசைவிக்கும் அன்னையே, தாமரை மலரின் மகரந்தத்தை உண்டு, அதன் தேனைப் பருகி, அதன் இதழ்களுக்குள்ளேயே வசிக்கும் வண்டுடன் ஞானியை ஒப்பிடுவதுண்டு. நீயும் உன் இறையும் உமது இணைவுக்கென ஆயிரமிதழ்த் தாமரையை தேர்ந்தெடுத்துள்ளீர்கள். சேற்றில் மலர்ந்தாலும், படைப்புகளிலேயே அதி தூயதாய் கொண்டாடப்படுவது செந்தாமரை. அதேபோல், மாசும், அறியாமையும், துயரும் நிரம்பிய இவ்வுலகில், நனவெனும் விண்ணக ஏரியில் திளைக்கும் சிவ-சக்தியைப் போல, ஞானம் ஒரு பெரும் விந்தையென மலர்கிறது.  கடந்தநிலையிலான சஹஸ்ராரத்திலிருந்து எண்ணங்களும் கவிதைகளும் நிரம்பிய… Read More ஶ்ரீசக்ர தியானம் – 38

ஶ்ரீசக்ர தியானம் – 37

டம் ஸர்வமந்த்ரமயீ ஞானத்தின் அன்னையே, இப்போது, இங்கிருந்தபடி அங்கே, அனைத்தையும் அரவணைத்திருப்பதை நாங்கள் காண்கிறோம். எல்லையிலா தெளிந்த வானை உன்னுடன் ஒப்பிடத்தோன்றுகிறது. நாங்கள் இருக்கவும் இயங்கவும் தேவையான வெளி அதில்தான் அருளப்பட்டிருக்கிறது. வானும் அதன் வெறுமையும் அனைத்தையும் ஒளிரச்செய்யும் ஒளியையும், தூயதாய் இருக்கையில் ஒளியின் ஊடுருவும் தன்மையையும் எண்ண வைக்கின்றன. தூய ஒளிர்வையும் (illumination) தூய ஒளிவின்மையையும் (transparency) கருதும்போதெல்லாம் சூரியனின் தூய ஒளியே எங்கள் எண்ணத்தில் இயல்பாக எழுகிறது. இதனால், அறிவு ஒளியுடனும் அறியாமை இருளுடனும்… Read More ஶ்ரீசக்ர தியானம் – 37

ஶ்ரீசக்ர தியானம் – 36

ட*ம் ஸர்வஸம்பத்திபூரனீ அருள்நிறை அன்னையே, மெய்யறிவரும் மெய்யியலாளரும் படைப்பு குறித்து சிந்தித்து மூன்று தரிசனங்களை அடைந்துள்ளனர். அவர்களில் சிலர் இறை என்பதை, பிரபஞ்சத் தந்தையெனக் காண்கின்றனர். அவன், பல்வகை உயிரினங்களைக் கொண்ட உலகுகளைத் தோற்றுவிக்க எண்ணி ஆழ்படிம உருமாதிரி எனும் கருத்தை உண்டாக்கி அதனை இயற்கையின் பிரபஞ்சக் கருப்பையில் செலுத்தியவன். அதிலிருந்து பல்வகை உயிரினங்கள் தோன்றின; ஒவ்வொன்றும் ஒரு இனத்தைச் சேர்ந்தவையாக அமைந்தன; அவை தம் இனத்தை பெருக்கின. மாறிக்கொண்டே இருக்கும் காரண-காரியச் செயல்பாடு வழியே அவை… Read More ஶ்ரீசக்ர தியானம் – 36

ஶ்ரீசக்ர தியானம் – 35

டம் ஸர்வார்த*ஸாத*னீ அன்னையே, நோக்கங்களை மெய்ப்படச் செய்பவளே, நீ அமைந்த மையப்புள்ளியை (பிந்துஸ்தானம்) தியானிக்கையில், நான் என் புருவமத்தியில் உள்ள ஆஞாவில் நிலைகொள்கிறேன். அங்கிருந்து மனம் விசாரணைகளாக குமிழ்ப்பதாக சொல்லப்படுகிறது. அதைத் தொடர்ந்து எண்ண ஓடைகள் எழுகின்றன. இயல்பிலேயே நீ இசைத் துடிப்புகளாக (நாதரூபிணி) இருக்கின்றாய். அப்பாலிருக்கும் விண்வெளியிலிருந்து (பராகாஶம்) நீ தோன்றுகிறாய் என்று சொல்லப்பட்டாலும், அண்டம் முழுதும் நீ பரவிக் கடந்து செல்கிறாய். ஒவ்வொரு மூலக்கூறிலிருந்தும் கலைநயமிக்க படைப்புகளை உருவாக்குகிறாய். அவற்றிலுள்ள போற்றுதற்குரிய பேரழகு வெளிப்படும்படி,… Read More ஶ்ரீசக்ர தியானம் – 35