ஶ்ரீசக்ர தியானம் – 44
னம் ஸர்வது:க*விமோசனீ எமக்கு உறுதிப்பாடளிப்பதில் மகிழும் அன்னையே! முழுமுதல் என்பது புதிர்களாலும் முரண்களாலும் நிரம்பியிருப்பதாகத் தோன்றுகிறது. நீயும் உன் இறைவனும் உனது லாஸ்ய நாட்டியத்தையும் அவனது அழிவாடலான தாண்டவ நடனத்தையும் ஆடுவதற்கென இங்கு-இப்போது எனும் ஒளிவட்டம் பாய்ச்சப்படும் எல்லையிலா கால-இடத்தை தேர்ந்தெடுத்துள்ளீர்கள். உனது படைப்பின் விரிவு எல்லையற்றது; எமது பார்வையோ குறுகியது. தொடுவானத்தின் எல்லைக்கப்பால், நீலவான் கூரை மறைத்திருக்கும் எதையும் எம்மால் காண முடிவதில்லை. நிகழ்காலம் என்பது ஒருபோதும் கண்ணிமைப்பை விட நீண்டதல்ல. கடந்துசெல்லும் ஒவ்வொரு கணமும்… Read More ஶ்ரீசக்ர தியானம் – 44