நடராஜ குருவும் நானும் – 10

நாங்கள் பெங்களூரை அடைந்தவுடன், “நீ மீண்டும் பேசத்தொடங்காததால், உன்னை அழைத்துக்கொண்டு நகரைச் சுற்றுவது சரியல்ல” என்றார் குரு.  வழக்கமாக குமார் மற்றும் சேகரன் இவர்களின் வீட்டிற்குச் செல்லும் குரு அதைத் தவிர்த்து ஜெயநகரில் புதிதாகக் கட்டப்பட்ட ஒரு வீட்டிற்கு என்னை அழைத்துச் சென்றார்.  அவர் கதவைத் திறந்தவுடன் ஒரு விமானம் அவ்வறையில் இருந்து கிளம்புவதுபோல் ‘ம்ம்ம்…’ என்னும் பேரொலி எழுந்தது.  என்னால் நான் காண்பதை நம்பமுடியவில்லை – எங்களைச் சுற்றி சிறியதும் பெரியதுமாக கருமேகம் போல் கொசுக்கூட்டம்! … Read More நடராஜ குருவும் நானும் – 10

நேர்காணல் – 10

22.6.1996 நான் ஒரு கதை போல சொல்வதுண்டு.  ஒருமுறை பஞ்சாபில் இருந்து ஒரு தோட்டக்கலை நிபுணர் இங்கு வந்தார்.  மிக அபூர்வமான சில மலர்ச் செடிகளின் விதைகளை எனக்குத் தந்தார்.  அன்றே அவருடன் நான் கோவை போக வேண்டியிருந்தது.  எனவே அவற்றைத் தொட்டியில் விதைத்து நீரூற்றிவிட்டு, அப்போது தோட்டத்தை கவனித்துக் கொண்டிருந்த ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு, கோவை போனேன்.  பத்துநாள் கழித்து திரும்பி வந்தால் தொட்டிகளில் வெண்டைச் செடிகள்தான் இருந்தன.  என்ன நடந்தது என்று விசாரித்தேன்.  தோட்டக்காரர் நீரூற்றப்பட்டு… Read More நேர்காணல் – 10

நேர்காணல் – 9

அறிவு எப்படி உள்முரண்கள் கொண்டதாக இருக்கிறது? யதார்த்தத்திற்கும் பரமார்த்தத்திற்கும் இடையே ஓர் இடைவெளி உள்ளது.  உலகில் எங்கும் பிரச்சினைகளுக்குக் காரணமாக உள்ளது இந்த இடைவெளிதான்.  இடையே பாலங்கள் இல்லை.  அறிவென்பது அப்படியொரு பாலத்தைக் கட்டும் முயற்சிதான்.  ஒருவன் அறிவையே தன் இறுதி இலக்காகக் கொள்வானானால் அவன் அடைவது ஏதுமில்லை.  ஆகவே ‘அறியாமையை வழிபடுபவன் இருளில் இருக்கிறான்; அறிவை வழிபடுபவன் அதைவிடப் பெரிய இருளில் இருக்கிறான்’ என்று நாராயண குரு சொன்னார்.  யதார்த்தமும் பரமார்த்தமும் மோதும்போது புதிர்கள் பிறக்கின்றன.  ஒபன்ஹியுமரின் பிரபலமான புதிர் ஒன்று… Read More நேர்காணல் – 9

நேர்காணல் – 8

நட்சத்திரங்கள் எங்குள்ளன? அவற்றைப் பார்ப்பவனின் மூளையில் –   பிஷப் பெர்க்லி 17.3.1996 யதியிடம் நேற்று அவர் பேசியது கடைசியில் ‘அறிதல்’ எனும் நிகழ்வின் சிக்கலில் சென்று நின்றுவிட்டது என்றோம்.  கார்ல் சாக்ஸ் எழுதிய நூல் ஒன்றை யதி கொண்டு வரச்சொன்னார்.  அதன் சில பகுதிகளைப் படித்தார்.  கார்ல் சாக்ஸ் உலகப்புகழ் பெற்ற நரம்பியல் நிபுணர்.  அவர் இன்னொரு ஆய்வாளருடன் சேர்ந்து நான்கு வித்தியாசமான நரம்பு நோயாளிகளைப் பற்றி எழுதிய ஆய்வு அது.  முதல் நோயாளி ஓர் ஓவியர். … Read More நேர்காணல் – 8

நேர்காணல் – 7

நான் அழகிற்காக இறந்தேன் கல்லறையில் வைக்கப்பட்டேன் உண்மைக்காக உயிர்விட்ட ஒருவர் என்னருகே படுக்கவைக்கப்பட்டபோது அஞ்சினேன் நான் ஏன் இறந்தேன் என்று அவர் கேட்டார் ‘அழகிற்காக’ என்றேன். ‘நான் உண்மைக்காக.  நாமிருவரும் சகோதரர்கள்’ என்றார் அவர் அவ்வாறாக உறவினர்களைப் போல இரவு முழுக்க உரையாடினோம் புல் வளர்ந்து பரவி எங்கள் உதடுகளை மூடி எங்கள் பெயர்களை மறைக்கும் வரை –    எமிலி டிக்கன்சன் 16.3.1996 இந்தக் கவிதையில் அழகும் உண்மையும் இரண்டல்ல,  ஒன்றுதான் என்ற தரிசனம் உள்ளது.  ஆனால்… Read More நேர்காணல் – 7

நேர்காணல் – 6

4.2.1996 காலையில் எட்டுமணிக்கு யதி நடக்கக் கிளம்புவதை ஒரு பிரம்மசாரி தட்டி எழுப்பிச் சொன்னார்.  அவசரமாக முகம் மட்டும் கழுவிவிட்டு ஓடிச்சென்றோம்.  கோட்டும் தொப்பியும் கைத்தடியுமாக யதி நின்று கொண்டிருந்தார்.  யதி காலை ஐந்துமணிக்கு எழுந்திருப்பார்.  இசை கேட்பார்.  பிறகு தியானம்.  பிறகு கடிதங்கள்.  குருகுல முகப்பில் பெரிய சைப்ரஸ் மரங்களின் இலைகளில் பனித்துளிகள் மணிகள் போல ஒளிவிட்டன.  கிழக்குப் பக்கமாகத் திரும்பி நடந்தார்.  எதிரே வரும் குழந்தைகள் ‘குரு’ என்று கீச்சுக் குரலில் கூவியபடி ஓடிவந்தன. … Read More நேர்காணல் – 6

நேர்காணல் – 5

3.2.1996 சென்ற முறை வந்தபோது இந்தியச் சிந்தனை முறையின் தனித்தன்மை பற்றிச் சொன்னீர்கள்.  நமது தத்துவ மரபிற்கும் மேற்கின் தத்துவ மரபிற்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன? பிலாசபி என்ற சொல்லையோ அதன் உட்பிரிவுகளையோ அடிப்படையாகக் கொண்டு நாம் நமது சிந்தனைகளை ஆராயக்கூடாது.  கீழைச் சிந்தனை முறை அடிப்படையில் வேறு.  துரதிர்ஷ்டவசமாக நமது கல்வித்துறை அடிப்படையில் மேற்கத்தியத் தன்மை கொண்டது.  ஆகவே இன்று மேற்குடனான வித்தியாசம் என்ற அளவிலேயே நாம் நமது சிந்தனையைப் பார்க்க வேண்டும். பிலாசபி… Read More நேர்காணல் – 5

நேர்காணல் – 4

1.1.1996 நவீனத்துவம் பற்றிக் கூறுங்கள்… ரோமன் கத்தோலிக்க மரபிற்குள் எழுந்த ஒரு சிந்தனை முறையே மாடர்னிசம் என்பது.  வாழ்க்கையில் விஞ்ஞானத்தின் பங்கு மிகவும் முக்கியமானதாக ஆகிவிட்டது என்று நவீனத்துவர்கள் நம்பினார்கள்.  விஞ்ஞானரீதியான ஆய்வு முறை என்பது புறவயமானது, சார்பற்றது, தருக்க முழுமை உடையது என்று எண்ணினார்கள்.  பைபிளை விஞ்ஞான அடிப்படையில் மறுபரிசீலனை செய்து தொகுக்க வேண்டும் என்றார்கள்.  விஞ்ஞானப் பார்வை என்று இவர்கள் குறிப்பிட்டது நிரூபணவாதப் பார்வையையே.  ஜெர்மனியில் டி.எம்.ஸ்ட்ராஸ், பிரான்ஸில் ஏனெஸ்ட் ரெனான், இங்கிலாந்தில் பிரடரிக்… Read More நேர்காணல் – 4

நேர்காணல் – 3

1.1.1996 யதி தன் அறைக்கு எங்களை வரச் சொன்னார்.  சிறிய அறை.  அதன் ஒருபக்கச் சுவர் விரிந்த மலைச்சரிவைப் பார்க்கத் திறக்கக்கூடியது  இரண்டு கணினிகள்.  விசாலமான பெரிய மேஜை.  அதன்மீது எழுதுபொருட்கள்.  கலையழகுமிக்க சீசாக்கள்.  அறையின் இரு சுவர்களிலும் நூல்களின் அடுக்குகள்.  சுவர்களில் நடராஜ குரு, ரமணர், நித்யானந்தர் முதலியவர்களின் உருவப்படங்கள்.  தாகூரின் புகைப்படம். கவிதைக்கும் மொழிக்கும் இடையேயான உறவு என்ன?  கவிதை மொழியின் ஒரு விளைவு மட்டும்தானா? கனவுக்கு மொழி இல்லையே.  கனவில் கவிதையில்லையா?  அதன்… Read More நேர்காணல் – 3

நேர்காணல் – 2

1.1.1996 நீங்கள் இலக்கியத்தை எப்படி மதிப்பிடுகிறீர்கள்? உண்மை என்று அகம் எதை அறிகிறதோ அதில் எவ்வித சமரசமும் இல்லாமலிருப்பவனே பெரிய படைப்பாளி.  முன்தீர்மானங்களும், சூழல் சார்ந்த மன மயக்கங்களும், நிர்பந்தங்களும், அச்சமும், சுயநலமும் படைப்பாளியை தன் அக உண்மையை நீர்த்துப்போக விடும்படி வற்புறுத்துகின்றன.  கோட்பாடுகள், தத்துவச் சட்டகங்கள் அவனுக்குத் தடைகளாகின்றன.  தன் சொந்த அனுபவங்களின் விளைவான முன் தீர்மானங்களும், தன் முந்தைய படைப்பு வழியாக அடைந்த அறிவின் பாரமும் பெரிய படைப்பாளிகளைக்கூட வழி தவறச் செய்துள்ளன.  குமாரன்… Read More நேர்காணல் – 2