நடராஜ குருவும் நானும் – 15

சென்னையில் கிருஷ்ண வர்மா எனும் நண்பர் இருந்தார்.  கொச்சியின் அரச பரம்பரையில் வந்தவரென்றாலும் அரச குடும்பத்தவரைப் போல நடத்தப்படுவதை விரும்பாதவர்.  தன் பெயரை வர்மா கிருஷ்ணன் என மாற்றிக்கொண்டவர்.  ஏஷியா பப்ளிஷிங் ஹவுஸ் நிறுவனத்தின் பதிப்பாசிரியர்களில் ஒருவரான அவர் நடராஜ குருவின்  பகவத் கீதை உரையைப் பற்றி கேள்விப்பட்டபோது தன் நிறுவனத்தின் மூலம் அதை பதிப்பிக்க விரும்பினார்.  ஆறுமாதங்கள் கழிந்தபின்னர், கையெழுத்துப் பிரதி பம்பாய்க்கு அனுப்பப்பட்டிருப்பதாக ஜான் ஸ்பியர்ஸிடம் தெரிவித்தார். பம்பாயிலும் எதுவும் முடிவாகவில்லை என்பதால் ஏஷியா… Read More நடராஜ குருவும் நானும் – 15

நடராஜ குருவும் நானும் – 14

மத்திய அமைச்சர் திரு குல்சாரிலால் நந்தா இந்தியாவில் உள்ள சன்னியாசிகளை எல்லாம் பாரத் சாது சமாஜ் என்ற அமைப்பின் கீழ் ஒருங்கிணைக்க எண்ணினார்.  தயங்காமல் அவர் விரித்த வலையில் வீழ்ந்து மகாராஷ்டிர மாநிலத்திற்கான அவரது செயலராக பொறுப்பேற்றேன். அத்தகைய அமைப்புகளின் அரசியல் உள்ளோட்டங்கள் குறித்து என்னை எச்சரித்த குரு பெரும்பதவிகளில் இருக்கும் அரசியல்வாதிகளின் கைப்பாவையாக நான் ஆகிவிடக்கூடாது என்றார். பம்பாய்க்கு வந்து தானே எல்லாவற்றையும் நேரில் காணவிரும்பினார்.  பம்பாயில் நாராயணகுருவை பின்பற்றிய சிலர் ஒரு சங்கத்தை அமைத்திருந்தனர். … Read More நடராஜ குருவும் நானும் – 14

நடராஜ குருவும் நானும் – 13

சோமனஹள்ளிக்கு வந்து ஆறுமாதங்களுக்குப் பிறகு நானிழந்திருந்த சொற்குவையை மீளப்பெற்றேன்.  பேசவேண்டும் என்ற விருப்பும் கூடிவந்தது.  அதன்பின்னர், அனேகமாக ஒவ்வொருநாளும் நகரத்திற்குச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டேன்.  அங்கே சூஃபிக்கள் சிலருடன் நட்பு ஏற்பட்டது.  அக்காலத்தில் மௌல்வி மொஹம்மத் எடசேரி என்றொரு கேரள முஸ்லீம் இருந்தார்.  அவர் குரானை மலையாளத்தில் மொழிபெயர்த்துக்கொண்டிருந்தார்.  தமிழ், கன்னடம், குஜராத்தி, பஞ்சாபி வேர்கள் கொண்ட சூஃபிக்கள் சிலருடன் அவர் வாழ்ந்து வந்தார்.  அவர்களால் எனக்கு ஜலாலுத்தீன் ரூமி, ஹஃபீஸ், அத்தர், காலிப் ஆகியோரிடம்… Read More நடராஜ குருவும் நானும் – 13

கலையில் ஆன்மீகம்

முதுகெலும்பில் ஓர் அறுவை சிகிச்சை செய்ய நான் அமெரிக்காவிலுள்ள இண்டியானாவிற்குப் போனேன்.  ஏன் இண்டியானாவை தேர்ந்தெடுத்தேன்?  அங்குதான் என் ஆத்ம நண்பரான டாக்டர் விஜயபிரசாந்தன் பிள்ளை வசித்து வருகிறார்.  ஏன் ஆத்ம நண்பராகக் கருதுகிறேன் என்றால் முழுவதும் பெளதீகமான  தோற்றங்களுக்கு அப்பால் ஓர் ஈர்ப்பு அவர் மீது ஏற்பட்டதுதான் காரணம்.  உயிருடன் வாழும் சில காலமேனும் சுமந்து நடக்க வேண்டிய முக்கியமான பெளதிகச் சார்புடைய செல்வமே என் முதுகெலும்பு.  அதை பிறர் கையில் எடுத்துப் போய் ஒப்படைக்க… Read More கலையில் ஆன்மீகம்

அன்பும் ஆசிகளும்

1948-ஆம் ஆண்டில் கோடை விடுமுறையில் நான் முதன்முறையாக ரமணமகரிஷியைப் பார்க்கச் சென்றேன்.  டாக்டர். மெஸ் அவர்களின் (சாது ஏகரஸர்) குரு அவர் என்பதால் எனக்குள் மிகப்பெரிய எதிர்பார்ப்பிருந்தது. செல்லும் முன்னால் அவரைப் பற்றிய பல நூல்களைப் படித்தேன். அப்படிப்பட்ட மகானைப் பார்ப்பது வாழ்வின் மிக முக்கியமான தருணம் என்று எண்ணியிருந்தேன். திருவண்ணாமலை மிகவும் வெப்பமான இடம். ஒருவரால் அந்த இடத்தில் இலகுவாக உணர்வது சிரமம். ஆசிரமத்தில் இருந்த ரமணமகரிஷியைக் காணச் செல்லும் முன்பு, தவமிருந்த அவருடைய ஆரம்ப… Read More அன்பும் ஆசிகளும்

பொருந்தாத மகுடம்

பல்கலைக் கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது, ஒரு துறவிபோல வாழ வேண்டும் என்கிற ஆவலில் தத்துவப் பாடப்பிரிவில் சேர்ந்தேன்.  முறைப்படி துறவியாக மாறும் முன்னரே நான் காவி ஆடைகளை அணியத் தொடங்கியிருந்தேன்.  கல்லூரிக்கு வெளியே யாரேனும் என் பெயரைக் கேட்டால், அத்வைதானந்தா என்றோ சச்சிதானந்தா என்றோ அந்த நேரத்தில் சட்டென்று வாய்க்கு வருகிற ஏதோ ஒரு பெயரைச் சொல்லிவிடுவேன்.  விவேகானந்தரின் சரிதையைப் படித்தபோது அவரும் இதேபோல நடந்துகொண்டதைப் படித்திருந்ததால் நானும் அது போலவே இருக்க விரும்பினேன்.  ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஒரு… Read More பொருந்தாத மகுடம்

நடராஜ குருவும் நானும் – 12

குரு சோமனஹள்ளிக்கு வந்த மறுநாள், ஒற்றை அறை கொண்ட குடிசையை விரிவுபடுத்த ஒரு சமையலறையை வடிவமைத்தார்.  அதை அரை வட்ட வடிவில் அமைப்பது அவருடைய திட்டம்.  குடிசையிலிருந்து புதிய சமையலறைக்குச் செல்ல கதவு ஏதும் கிடையாது.  சுவரில் இருந்த ஒரு திறப்புதான் வழி.  வடிவத்தை முடிவு செய்த பின்னர், ஒரு வாளியை எடுத்துக்கொண்டு ஆற்றை நோக்கி நடந்தார் குரு.  என்னையும் ஒரு வாளியை எடுத்துக்கொண்டு வரச்சொன்னார்.  வாளியில் கற்களை சேகரித்துக்கொண்டு கட்டட வேலை நடக்குமிடத்திற்கு வந்தோம்.  எங்களைப்… Read More நடராஜ குருவும் நானும் – 12

விடுதலையின் மெய்யியல்

‘அடுத்து என்ன?’ என்ற கேள்வியின் விளைவாகவே எதனுடைய தொடக்கமும் நிகழ்கிறது.  ‘அடுத்து நான் செய்ய வேண்டியது என்ன?’ என்ற நம்முடைய கேள்விக்கு நாம் பதில் சொல்ல வேண்டிய் சந்தர்ப்பம் எந்த நேரத்திலும் வாய்க்கலாம்.  இந்தக் கேள்வி பலரை குழப்பமடையச் செய்கிறது.  இந்தக் கேள்வியை முகங்கொள்ளும்போது, தீர்க்கப்படவேண்டிய எண்ணற்ற பிரச்சினைகளையும், சந்திக்க வேண்டிய நெருக்கடிகளையும், எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைகளையும் சிலர் அனுபவிக்கிறார்கள்.  மிகுந்த மனக்குழப்பத்துக்கு ஆளாகிறார்கள்; ஆயிரக்கணக்கானவற்றிலிருந்து ஒரு உறுதியற்ற உணர்வால் அவர்களுடைய இயலாமையின் முடிவற்ற படுபாதாளத்தில் அவர்கள்… Read More விடுதலையின் மெய்யியல்

மரணத்தை எதிர்கொள்ளல் – 5

மரணத்தைப் பற்றிய மிகச் சிறந்த புத்தகம் ‘கதா உபநிஷத்’.  அந்த அற்புதக் கதையில் ஒரு சிறுவன் மரணத்துக்கு எதிராக நிறுத்தப்படுகிறான்.  ஒரு புறம், இடைவிடாத ஆக்கம், வாழ்க்கையின் இயக்கம் ஆகியவற்றின் பிரதிநிதியான அச்சிறுவன் எல்லா சாத்தியக்கூறுகளையும் கண்ணுறுகிறான்.  திடீரென்று இந்தப் புலன் சார்ந்த விளையாட்டு சுவாரஸ்யமற்று இருப்பதாக அவன் கருதுகிறான்.  இதற்கு மாறாக அவன் புலன்களைக் கடந்த நிலையைப் பற்றி சிந்திக்கிறான்.  எனவே, வாழ்வும் மரணமும் ஒரு பக்கம், கடந்த நிலைக்கான சாத்தியம் இன்னொரு பக்கம்.  கடந்த… Read More மரணத்தை எதிர்கொள்ளல் – 5

மரணத்தை எதிர்கொள்ளல் – 4

என்னுடைய மரணத்தின்போது நான் வலியுறுத்திச் சொல்லும் முதல் விஷயம், எந்தவித மந்திர உச்சாடனமோ அல்லது வேறு வகையான சூழலுக்குக் கேடு விளைவிக்கும் கூச்சலோ இருக்கக்கூடாது என்பதுதான்.  மக்கள் அவரவர் வேலையைப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும்.  சடலத்தை அப்படியே கிடக்கவிட்டால் கொஞ்ச நேரத்தில் நாற்றமடிக்க ஆரம்பித்துவிடும்.  எனவே, அதை உரிய வகையில் அப்புறப்படுத்த வேண்டும்.  இதில் பலமுறைகளைப் பற்றி நான் யோசித்து வருகிறேன்.  அதை எரித்துவிடுவது ஒருவகை.  ஆனால், ‘நான் இறந்துவிடும்போது நான் முழுமையாக இறந்திருக்கிறேனா?’ என்ற கேள்வி என்… Read More மரணத்தை எதிர்கொள்ளல் – 4