வேண்டுதல்கள் – 8

கண்ணுக்குத் தெரியாத தீர்க்கதரிசி

 

தானாடாமல் ஆட்டுவிப்பவன் இறைவன்

கண்ணுக்குத் தெரியாத தீர்க்கதரிசி

படைப்புச் செயல்களில் எல்லாம்

நளினமாய் இருப்பவன்

என்றாலும்

என் அகத்தை சுழற்றி முறுக்கும்

நீயே எனை ஆட்டுவிப்பவன்

பொல்லாத கற்பனைகளைத் தூண்டும்

கண்ணுக்குத் தெரியாத ஒளி நீ

வாழ்வின் மணத்தை நுகர்வதற்கு 

ஒரே காரணம் நீ

எவ்வகையிலும் எங்கும் இருந்துகொண்டே

எல்லாவற்றிலிருந்தும்

விலகியிருக்கும் ரகசியத்தை

உன்னிடமிருந்துதான் நான் கற்க வேண்டும்

 

Leave a comment