வேண்டுதல்கள் – 5 இருத்தலில் இல்லாமை புகழப்படும்போது உன் விழிகள் ஒளிர்வதில்லை நிந்திக்கப்படும்போது உன்கன்னங்கள் இருள்வதில்லை நான் இதயத்தை திறக்கும்போது உன்னுள் மூழ்கி அமர்ந்திருக்கிறாய் அக்கறையின்றி நானிருக்கும்போது சேவை புரிவதில் கவனமாய் இருக்கிறாய் இரக்கமே உருவான உன் இருப்பில்கூட யாரும் தடுக்கிக்கொள்ளாவண்ணம் அமைதியுடன் தன்முனைப்பை அழித்தொழிக்கும் ரகசியத்தை உன்னிடம் பயிலவேண்டும் Share this: Click to share on X (Opens in new window) X Click to share on Facebook (Opens in new window) Facebook Like Loading...